கோவை: தேவர் ஜெயந்தி விழாவின் போது, திருநீறு பூச மறுத்து, முக்குலத்தோர் மக்களின் உணர்வுகளை இழிவுபடுத்திய, திமுக தலைவர் ஸ்டாலின், மன்னிப்பு கேட்க வேண்டும், என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கோவையில் தெரிவித்துள்ளார்.
கோவை: தேவர் ஜெயந்தி விழாவின் போது, திருநீறு பூச மறுத்து, முக்குலத்தோர் மக்களின் உணர்வுகளை இழிவுபடுத்திய, திமுக தலைவர் ஸ்டாலின், மன்னிப்பு கேட்க வேண்டும், என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கோவையில் தெரிவித்துள்ளார்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் தேவர் ஜெயந்தி விழாவில், திருநீறு பூச மறுத்து முக்குலத்தோர் மக்களின் உணர்வுகளை இழிவுபடுத்தி விட்டதாக குற்றம் சாட்டினார்.
இதற்காக, ஸ்டாலின் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்கும் வரையில் போராட்டங்கள் நடத்துவோம், என்று அவர் கூறினார்.
மேலும், கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம் எனவும் இந்த தேர்தலில் கூடுதல் சீட் கேட்பேன் என்று கூறிய அவர், தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கவில்லை எனில் அதிமுகவை ஆதரிக்க மாட்டேன் எனத் தெரிவித்தார்.
சசிகலாவிற்கு எந்த சூழலிலும் அரணாக இருப்பேன் எனவும் இன்னும் நூறு பாஜக வந்தாலும் தமிழ் மண்ணில் சமூக நீதி காக்கப்படும், என்று அவர் தெரிவித்தார்.