கோவை: வடகிழக்கு பருவமழை தொடங்கவிருப்பதால், கோவையில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். ஆய்வில்,18 இடங்கள் அபாயகரமான இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது, என தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை: வடகிழக்கு பருவமழை தொடங்கவிருப்பதால், கோவையில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். ஆய்வில்,18 இடங்கள் அபாயகரமான இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது, என தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கோவையை பொறுத்தவரை இன்னும் பருவமழை துவங்கவில்லை. அடுத்த சில நாட்களில் பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளது என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடு பனிகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.
இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவிற்கும் துணை கலெக்டர் பதவி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் கண்காணிப்பளராக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் தலைமையில், அந்தந்த தாலுக்காக்களில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இது தவிர, தாழ்வான பகுதிகள், மழைநீர் தேங்க வாய்ப்பு உள்ள இடங்கள், அபாயகரமான பகுதிகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன.
இதன்படி, மேட்டுப்பாளையத்தில் 11 இடங்களும், ஆனைமலையில் ஒரு இடமும், வால்பாறையில் 3 இடமும், பேரூர் பகுதியில் 3 இடங்களும் என 18 இடங்கள் அபயகரமான இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. மேலும், வெள்ள நீர் வீடுகளில் புகுந்தால், அவர்களை தங்க வைக்க 31 தற்காலிக முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தாலுகாவிலும் மழைசேத விவரங்களை உடனுக்குடன் அரசு அதிகாரிகளுக்கு தெரிவிக்க, தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மழையால் ஏற்படும் சேதங்களை தவிர்க்க முன்னெற்பாடு பணிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன, என அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கோவையை பொறுத்தவரை இன்னும் பருவமழை துவங்கவில்லை. அடுத்த சில நாட்களில் பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளது என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடு பனிகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.
இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவிற்கும் துணை கலெக்டர் பதவி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் கண்காணிப்பளராக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் தலைமையில், அந்தந்த தாலுக்காக்களில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இது தவிர, தாழ்வான பகுதிகள், மழைநீர் தேங்க வாய்ப்பு உள்ள இடங்கள், அபாயகரமான பகுதிகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன.
இதன்படி, மேட்டுப்பாளையத்தில் 11 இடங்களும், ஆனைமலையில் ஒரு இடமும், வால்பாறையில் 3 இடமும், பேரூர் பகுதியில் 3 இடங்களும் என 18 இடங்கள் அபயகரமான இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. மேலும், வெள்ள நீர் வீடுகளில் புகுந்தால், அவர்களை தங்க வைக்க 31 தற்காலிக முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தாலுகாவிலும் மழைசேத விவரங்களை உடனுக்குடன் அரசு அதிகாரிகளுக்கு தெரிவிக்க, தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மழையால் ஏற்படும் சேதங்களை தவிர்க்க முன்னெற்பாடு பணிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன, என அவர் தெரிவித்தார்.