கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்; 18 இடங்கள் அபாயகரமானவை என அறிவிப்பு

கோவை: வடகிழக்கு பருவமழை தொடங்கவிருப்பதால், கோவையில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். ஆய்வில்,18 இடங்கள் அபாயகரமான இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது, என தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: வடகிழக்கு பருவமழை தொடங்கவிருப்பதால், கோவையில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். ஆய்வில்,18 இடங்கள் அபாயகரமான இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது, என தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கோவையை பொறுத்தவரை இன்னும் பருவமழை துவங்கவில்லை. அடுத்த சில நாட்களில் பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளது என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடு பனிகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.

இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவிற்கும் துணை கலெக்டர் பதவி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் கண்காணிப்பளராக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் தலைமையில், அந்தந்த தாலுக்காக்களில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இது தவிர, தாழ்வான பகுதிகள், மழைநீர் தேங்க வாய்ப்பு உள்ள இடங்கள், அபாயகரமான பகுதிகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன.

இதன்படி, மேட்டுப்பாளையத்தில் 11 இடங்களும், ஆனைமலையில் ஒரு இடமும், வால்பாறையில் 3 இடமும், பேரூர் பகுதியில் 3 இடங்களும் என 18 இடங்கள் அபயகரமான இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. மேலும், வெள்ள நீர் வீடுகளில் புகுந்தால், அவர்களை தங்க வைக்க 31 தற்காலிக முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தாலுகாவிலும் மழைசேத விவரங்களை உடனுக்குடன் அரசு அதிகாரிகளுக்கு தெரிவிக்க, தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மழையால் ஏற்படும் சேதங்களை தவிர்க்க முன்னெற்பாடு பணிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன, என அவர் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...