கோவையில் சேர்ந்து வாழ மறுத்த மனைவியை கத்தியால் குத்திய கணவன்; சிறையில் அடைப்பு

கோவை: கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருபவர் விஜயசங்கர். இவருக்கு, ரஞ்சிதா (25) என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.



கோவை: கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருபவர் விஜயசங்கர். இவருக்கு, ரஞ்சிதா (25) என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு விஜயசங்கர் குடித்துவிட்டு வந்து ரஞ்சிதாவிடம் தகராறு செய்து உள்ளார். இதனால், மனவேதனை அடைந்த ரஞ்சிதா கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தனது அண்ணன் வீட்டில் வசித்து வந்த உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் விற்பனை பிரதிநிதியாக வேலை கிடைக்க பெற அங்கு பபணியாற்றி வந்துள்ளார்.

சம்பவத்தன்று, இரவு ரஞ்சிதா தங்கியிருந்த வீட்டிற்கு வந்த விஜயசங்கர், தன்னுடன் சேர்ந்து வாழ அழைத்துள்ளார். இதற்கு ரஞ்சிதா மறுக்கவே, கொலை செய்யும் நோக்கத்துடன் வந்திருந்தவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஞ்சிதாவை குத்திவிட்டு, அங்கு இருந்து தப்பி உள்ளார்.

ரஞ்சிதாவை அருகில் வசிப்பவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்து உள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல்துறையினர் விஜய்சங்கர் மீது வழக்குபதிவு செய்தனர். அவரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு, நேற்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...