பாஜகவில் சாதாரண உறுப்பினரும் உயர் பதவிக்கு வரமுடியும் - வானதி சீனிவாசன், தேசிய மகளிர் அணி தலைவர்.

பாஜகவில் சாதாரண உறுப்பினரும் உயர் பதவிக்கு வரமுடியும் - வானதி சீனிவாசன், தேசிய மகளிர் அணி தலைவர்.

கோவை: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக இருந்த வானதி சீனிவாசன், பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியின் தேசிய தலைவராக அண்மையில் அறிவிக்கப்பட்டார்.

தமிழகத்தை சேர்ந்த ஒருவர் இந்தப் பதவியை வகிப்பது இதுதான் முதல்முறை. இந்நிலையில், இன்று கோவை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு வந்த வானதி சீனிவாசனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக அவருக்கு ஆளுயர மாலையும்,மலர் கிரீடமும் அணிவிக்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட பாரதிய ஜனதா மகளிர் அணி சார்பில் அவருக்கு வேல் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

இதன் பின்னர், தொண்டர்கள் இடையே உரையாற்றிய வானதி சீனிவாசன், சாதாரண தொண்டரும் உயர் பதவியை அடையலாம் என்பது பாரதிய ஜனதா கட்சியில் மட்டுமே முடியும் எனவும் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் பெண்களுக்கு பல சலுகைகளும், முன்னேற்றத்திற்கான பாதையும் அமைத்து தரப்பட்டுள்ளது, என்று தெரிவித்தார்.

கட்சியின் வளர்ச்சிக்கு மகளிர் அணியின் பங்கு மிகவும் முக்கியமானது எனவும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் வட மாநில கட்சி குறிப்பிட்ட சமுதாயத்தின் கட்சி என்று விமர்சிக்கப்படும் நிலையில், பாரதிய ஜனதா கட்சிக்கு ஹிந்தி பேசத் தெரியாத எனக்கு இந்த பதவி தரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.



மேலும், தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு எம்பி மற்றும் எம்.எல் யாரும் இல்லை என்ற போதும், தமிழகத்தை சேர்ந்த ஒருவரை மகளிர் அணி தலைவராக அறிவித்திருப்பது தமிழகத்தின் மீது பாரதிய ஜனதா கட்சி வைத்திருக்கும் நம்பிக்கையை உறுதி செய்துள்ளது, என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தொடர்ந்து, வரும் 2021 சட்டசபை தேர்தலில் கண்டிப்பாக பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள்

வெல்வார்கள், எனவும் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் இதற்கு மகளிரணியினர் 100% உறுதுணையாக இருப்போம், என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.



பின்னர், செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் தமிழகத்தின் எல்லா கட்சிக்கும் அவர்களுக்கு நிகழ்ச்சியை அறிவிப்பதில் உரிமையிருக்கிறது, எனவும் வேல் யாத்திரைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது, அந்த யாத்திரையை கண்டு அவர்களின் பயத்தையே காட்டுகிறது என்றார்.

இன்றைய நிகழ்வில், பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவரான, பேராசிரியர் கனகசபாபதி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, மாநில பொருளாளர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டு, வானதி சீனிவாசன் வாழ்த்தினர்.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...