கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு..! மகள் உயிரிழப்பை அறிந்து தாய் மாரடைப்பால் மரணம்!

கோவை: கோவையில் மகள் உயிரிழப்பை அறிந்து தாய் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவையில் மகள் உயிரிழப்பை அறிந்து தாய் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சண்முகம்-பிரேமகுமாரி. இத்தம்பதியினர் தனது மகள் அனுராதா, மருமகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில், வீட்டில் பூச்சி தொல்லை காரணமாக நேற்று பூச்சி மருந்து அடித்து உள்ளனர். மருந்தின் நெடி காற்றில் பரவிய நிலையில், அதனை சுவாசித்ததால் சண்முகத்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். 

இதேபோல், அனுராதாவிற்கும் சுவாச கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அழைத்துச் சென்று உள்ளனர். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். 

அனுராதா மரணமடைந்த சம்பவம் குறித்து அவரது தாய் பிரேமகுமாரியிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே மரணம் அடைந்தார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...