கோவை மதுக்கரை அருகே மனைவியுடன் தகாத உறவு இருந்தாக சந்தேகத்தின் பேரில் உறவினரை கத்தியால் குத்திய நபர் கைது!

கோவை: கோவை மதுக்கரை அருகே மனைவியுடன் தகாத உறவு இருந்தாக சந்தேகத்தின் பேரில் உறவினரை கத்தியால் குத்திய நபர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை: கோவை மதுக்கரை அருகே மனைவியுடன் தகாத உறவு இருந்தாக சந்தேகத்தின் பேரில் உறவினரை கத்தியால் குத்திய நபர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை மதுக்கரை அறிவொளிநகர் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ் (35). தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆம்புலென்ஸ் டிரைவராக பணி செய்து வருகிறார்.

இவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரவீனா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள், ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியில் வசித்து வரும் காளிதாஸின் அத்தை மகனான ராகேஷ் (29) ஈச்சனாரி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பரவைசராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், பிரவீனாவிற்கும் ராகேஷுக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு ராகேஷ் பணி முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் அறிவொளி நகர் வந்துள்ளார். அப்போது, வீட்டிற்கு செல்லும் வழியில் காத்திருந்த காளிதாஸ் ராகேஷை தடுத்து நிறுத்தி மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியுள்ளார்.

மேலும், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராகேஷின் முதுகு பகுதியில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அங்கிருந்தவர்கள் ராகேஷை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், ராகேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த மதுக்கரை போலீசார், இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காளிதாஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...