கோவை: கோவை கருமத்தம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த அரசு ஊழியர்களை தாக்கி 6 பவுன் தங்க நகை மற்றும் 20000 பணம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவை கருமத்தம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த அரசு ஊழியர்களை தாக்கி 6 பவுன் தங்க நகை மற்றும் 20000 பணம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை இருகூர் அடுத்த அத்தப்பகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் நாகமணி. இவர் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், வழக்கம்போல் நேற்று பணிக்கு வந்த அவர், பணி முடிந்த பின் அங்கு பணிபுரியும் ராமு என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கருமத்தம்பட்டியை நோக்கி சென்றுள்ளனர்.
அப்போது, தனியார் கல்லூரி அருகே வரும்போது செல்போன் அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து, ராமு இருசக்கர வாகனத்தை நிறுத்தி போன் பேசியுள்ளார். அப்போது திடீரென அந்த பகுதியில் இருந்து வந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென நாகமணி வைத்திருந்த கைப்பையை பிடுங்கிவிட்டு காட்டுப்பகுதிக்குள் ஓடியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் மர்ம நபர்களை துரத்தினர்.
இதனை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் நாகமணியை பிடித்து, அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துவிட்டு தப்ப முயன்றனர். அப்போது அதனை தடுக்க வந்த ராமுவை கட்டையால் தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 500 ரூபாய் பணத்தை பிடுங்கி கொண்டு மாயமாகினர்.
இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் நாகமணி கைப்பையில் 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 5 பவுன் தங்க செயின் மற்றும் ஒரு பவுன் தாலிக்கொடியை கொள்ளையர்கள் பிடுங்கிச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து, போலீசார் அந்த பகுதியில் ஏதேனும் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு ஊழியரிடம் தங்கச் செயின் பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை இருகூர் அடுத்த அத்தப்பகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் நாகமணி. இவர் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், வழக்கம்போல் நேற்று பணிக்கு வந்த அவர், பணி முடிந்த பின் அங்கு பணிபுரியும் ராமு என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கருமத்தம்பட்டியை நோக்கி சென்றுள்ளனர்.
அப்போது, தனியார் கல்லூரி அருகே வரும்போது செல்போன் அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து, ராமு இருசக்கர வாகனத்தை நிறுத்தி போன் பேசியுள்ளார். அப்போது திடீரென அந்த பகுதியில் இருந்து வந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென நாகமணி வைத்திருந்த கைப்பையை பிடுங்கிவிட்டு காட்டுப்பகுதிக்குள் ஓடியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் மர்ம நபர்களை துரத்தினர்.
இதனை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் நாகமணியை பிடித்து, அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துவிட்டு தப்ப முயன்றனர். அப்போது அதனை தடுக்க வந்த ராமுவை கட்டையால் தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 500 ரூபாய் பணத்தை பிடுங்கி கொண்டு மாயமாகினர்.
இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் நாகமணி கைப்பையில் 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 5 பவுன் தங்க செயின் மற்றும் ஒரு பவுன் தாலிக்கொடியை கொள்ளையர்கள் பிடுங்கிச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து, போலீசார் அந்த பகுதியில் ஏதேனும் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு ஊழியரிடம் தங்கச் செயின் பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.