திருப்பூர்: ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருப்பூரில் தொழிற்சங்க மாநில தலைவர் சுப்பராயன் கொடியேற்றி வைத்தார்.
திருப்பூர்: ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருப்பூரில் தொழிற்சங்க மாநில தலைவர் சுப்பராயன் கொடியேற்றி வைத்தார்.

ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் மாநில தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பராயன் தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
முன்னதாக, திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள தொழிற்சங்க கிளைகளில் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் மாநில தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பராயன் தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
முன்னதாக, திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள தொழிற்சங்க கிளைகளில் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.