தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில முடியும் - அமைச்சர் செங்கோட்டையன்

திருப்பூர்: தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில முடியும் என திருப்பூரில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


திருப்பூர்: தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில முடியும் என திருப்பூரில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 571 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் ஆணைகளை வழங்கும் நிகழ்வில் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் வகையில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளதாகவும், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் வகையில் தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக 300க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில முடியும் எனவும் தெரிவித்தார்.

மேலும், பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை எந்த ஒரு கருத்தும் முதல்வரிடம் தெரிவிக்கவில்லை எனவும் இருப்பினும் வருவாய்த்துறை மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து இதுகுறித்து முதல்வர் அறிவிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...