தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து மதுரை, தூத்துக்குடி, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வலியுறுத்தல்!

கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து தென்மாவட்டங்களான தூத்துக்குடி, மதுரை, நாகர்கோவிலுக்கு சிறப்பு விரைவு ரயில்கள் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.


கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து தென்மாவட்டங்களான தூத்துக்குடி, மதுரை, நாகர்கோவிலுக்கு சிறப்பு விரைவு ரயில்கள் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

கோவையில் இருந்து சென்னை, மயிலாடுதுறை மற்றும் கேரள மாநிலம் எர்ணாக்குளம், திருவனந்தபுரத்தில் இருந்து கோவை வழித்தடத்தில் 10க்கும் மேற்பட்ட பண்டிகைக் காலச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நவம்பர் 14ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்குச் சிறப்பு விரைவு ரயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, கோவை மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவர் ஜமீல் அஹமது கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கி வேலை பார்க்கும் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிகமானோர், தீபாவளியை தங்களின் சொந்த ஊர்களில் கொண்டாடச் செல்வார்கள்.

ஆகவே, இந்தாண்டு தீபாவளிக்கு கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, நாகர்கோவில் வழித்தடம் மற்றும் கோவை, போத்தனூர், கிணத்துக்கடவு, மடத்துக்குளம், உடுமலை, பழனி, மதுரை வழித்தடத்தில் முன்பதிவில்லாத, சிறப்பு விரைவு ரயில் இயக்க வேண்டும்.

தீபாவளிக்கு 10 நாள்கள் முன்பே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டால், வெளியூர் செல்வோர்களுக்கு வசதியாக இருக்கும். அதேபோல், பண்டிகை முடிந்து 15 நாள்கள் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டால், தொழிலாளர்கள் மீண்டும் கோவைக்கு திரும்பி வந்து பணிகளைத் தொடரவும் எளிதாக இருக்கும்,’’ என்று தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...