கோவை உக்கடம் முதல் கரும்புகடை வரை மேம்பாலத்தின் கீழ் இன்று முதல் நான்கு சக்கர இலகுரக வாகனங்கள் அனுமதி!

கோவை: கோவை உக்கடம் முதல் கரும்புகடை வரை மேம்பாலத்தின் கீழ் இன்று முதல் நான்கு சக்கர இலகுரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.


கோவை: கோவை உக்கடம் முதல் கரும்புகடை வரை மேம்பாலத்தின் கீழ் இன்று முதல் நான்கு சக்கர இலகுரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.



கோவை உக்கடத்திலிருந்து கரும்புக்கடை வரை கடந்த இரு வருடங்களாக மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கடந்த இரு வருடங்களாக உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை, ஆத்துப்பாலம் செல்லும் நான்கு சக்கர வாகனங்கள் பேருந்துகள் ஆகியவை புட்டுவிக்கி பாலம் வழியாக சுமார் ஆறு கிலோ மீட்டர் சுற்றி வருகின்றன.

இந்நிலையில், தற்பொழுது மேம்பாலப் பணிகள் பெருமளவு முடிந்துள்ள நிலையில், மேம்பாலத்தின் கீழ் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு உக்கடத்திலிருந்து கரும்புக்கடை வரை செல்வதற்காக ஒரு பாதை போடப்பட்டு நான்கு சக்கர இலகுரக வாகனங்கள் மட்டும் செல்வதற்கு வழி செய்யப்பட்டுள்ளது.



இதனால் உக்கடத்திலிருந்து ஆத்துப்பாலம் செல்லும் நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



ஆனால், அதே சமயம் கரும்புக்கடை வழியாக உக்கடம் வரும் வாகன ஓட்டிகள் பலரும் உக்கடம் குளத்தை ஒட்டி போடப்பட்டுள்ள சாலையை பயன்படுத்தாமல் இதே சாலையை பயன்படுத்துவதால் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...