கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இறுதி வாரம் முதல் நவம்பர் மாதம் முதல் வாரம் வரை மத்திய அரசு சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி, கோவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி உத்தரவின் பேரில், கோவை அரசு கலைக் கல்லூரி முதல்வர் தலைமையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி கோவை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் முதுகலை சேர்க்கைக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் ரவிக்குமார், ரங்கநாதன், புவியியல் துறை பேராசிரியர், நாட்டு நலப்பணித்திட்ட பேராசிரியர் குணசேகரன் ஆகியோர் உறுதிமொழி வாசித்தனர். பின்னர் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இறுதி வாரம் முதல் நவம்பர் மாதம் முதல் வாரம் வரை மத்திய அரசு சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி, கோவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி உத்தரவின் பேரில், கோவை அரசு கலைக் கல்லூரி முதல்வர் தலைமையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி கோவை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் முதுகலை சேர்க்கைக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் ரவிக்குமார், ரங்கநாதன், புவியியல் துறை பேராசிரியர், நாட்டு நலப்பணித்திட்ட பேராசிரியர் குணசேகரன் ஆகியோர் உறுதிமொழி வாசித்தனர். பின்னர் மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.