பொள்ளாச்சி அருகே 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரத்தை வெட்டியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே பாலமநல்லூர் புதூர் என்ற கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரத்தை வெட்டியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே பாலமநல்லூர் புதூர் என்ற கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரத்தை வெட்டியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பாலமநல்லூர்புதூர் கிராமத்தில், பேருந்து நிறுத்தம் அருகே புறம்போக்கு நிலத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஆலமரம் இருந்தது. இந்த மரம் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கும், வெயில் மழைக்கு ஒதுங்கும் மக்களுக்கு நிழல் தரும் மரமாக இருந்து வந்தது. 

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த ஆலமரத்தை சிலர் வெட்டி கடத்த முயற்சிப்பதாக வருவாய் துறையினருக்கு, அப்பகுதி கிராம மக்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், பொள்ளாச்சியை சேர்ந்த காஜா என்பவர் மரம் வெட்டுவதற்காக ஆட்களை வரவழைத்து அனுமதி இல்லாமல் வெட்டியது தெரியவந்தது.



இதனையடுத்து, மரம் வெட்டுவதற்கு பயன்படுத்த கோடாரி, ரம்பம், மற்றும் கருவிகளை பறிமுதல் செய்த வருவாய் துறையினர், மேலும் அனுமதி இல்லாமல் மரத்தை வெட்டியபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோட்டூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். 



அதன் பேரில், வழக்குப் பதிவு செய்த கோட்டூர் காவல்துறையினர், மரம் வெட்டியவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக ஆலவிருட்சமாக இருந்து பறவைகளின் வாழ்விடமாகவும், பொதுமக்களுக்கு நிழல் தந்த, மரம் தற்போது கிளைகளை இழந்து காட்சியளிப்பது, அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...