பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே பாலமநல்லூர் புதூர் என்ற கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரத்தை வெட்டியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே பாலமநல்லூர் புதூர் என்ற கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரத்தை வெட்டியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பாலமநல்லூர்புதூர் கிராமத்தில், பேருந்து நிறுத்தம் அருகே புறம்போக்கு நிலத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஆலமரம் இருந்தது. இந்த மரம் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கும், வெயில் மழைக்கு ஒதுங்கும் மக்களுக்கு நிழல் தரும் மரமாக இருந்து வந்தது.
பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த ஆலமரத்தை சிலர் வெட்டி கடத்த முயற்சிப்பதாக வருவாய் துறையினருக்கு, அப்பகுதி கிராம மக்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், பொள்ளாச்சியை சேர்ந்த காஜா என்பவர் மரம் வெட்டுவதற்காக ஆட்களை வரவழைத்து அனுமதி இல்லாமல் வெட்டியது தெரியவந்தது.

இதனையடுத்து, மரம் வெட்டுவதற்கு பயன்படுத்த கோடாரி, ரம்பம், மற்றும் கருவிகளை பறிமுதல் செய்த வருவாய் துறையினர், மேலும் அனுமதி இல்லாமல் மரத்தை வெட்டியபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோட்டூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன் பேரில், வழக்குப் பதிவு செய்த கோட்டூர் காவல்துறையினர், மரம் வெட்டியவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக ஆலவிருட்சமாக இருந்து பறவைகளின் வாழ்விடமாகவும், பொதுமக்களுக்கு நிழல் தந்த, மரம் தற்போது கிளைகளை இழந்து காட்சியளிப்பது, அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பாலமநல்லூர்புதூர் கிராமத்தில், பேருந்து நிறுத்தம் அருகே புறம்போக்கு நிலத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஆலமரம் இருந்தது. இந்த மரம் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கும், வெயில் மழைக்கு ஒதுங்கும் மக்களுக்கு நிழல் தரும் மரமாக இருந்து வந்தது.
பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த ஆலமரத்தை சிலர் வெட்டி கடத்த முயற்சிப்பதாக வருவாய் துறையினருக்கு, அப்பகுதி கிராம மக்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், பொள்ளாச்சியை சேர்ந்த காஜா என்பவர் மரம் வெட்டுவதற்காக ஆட்களை வரவழைத்து அனுமதி இல்லாமல் வெட்டியது தெரியவந்தது.

இதனையடுத்து, மரம் வெட்டுவதற்கு பயன்படுத்த கோடாரி, ரம்பம், மற்றும் கருவிகளை பறிமுதல் செய்த வருவாய் துறையினர், மேலும் அனுமதி இல்லாமல் மரத்தை வெட்டியபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோட்டூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன் பேரில், வழக்குப் பதிவு செய்த கோட்டூர் காவல்துறையினர், மரம் வெட்டியவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக ஆலவிருட்சமாக இருந்து பறவைகளின் வாழ்விடமாகவும், பொதுமக்களுக்கு நிழல் தந்த, மரம் தற்போது கிளைகளை இழந்து காட்சியளிப்பது, அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.