கோவையில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து தர பெண்ணின் பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை!

கோவை: கோவையில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து தர பெண்ணின் பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து தர பெண்ணின் பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வடவள்ளி கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் மாணிக்கம் (21). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ படித்து வந்தார்.

கொரோனா காரணமாக கல்லூரிகள் இயங்காமல் விடுமுறை என்பதால் வடவள்ளி பகுதியில் உள்ள ஒரு மொபைல் கடையில் வேலை செய்து வந்துள்ளார். மாணிக்கம் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியை கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்து உள்ளார்.

இந்நிலையில், அந்த பெண் மாணிக்கத்திடம் தனக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்து வருவதாகவும், எனவே வீட்டுக்கு வந்து பெண் கேட்குமாறு கூறி உள்ளார். இதனையடுத்து, மாணிக்கம் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண்ணின் பெற்றோர்களிடம் அவர்களின் பெண்னை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார்.

இதனை அவர்கள் மறுத்து திருமணம் செய்து வைக்க விருப்பம் இல்லை எனக் கூறி உள்ளனர். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மன வேதனையுடன் இருந்து வந்த மாணிக்கம் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வடவள்ளி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலித்த பெண்ணை அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து தர மறுத்ததால் மனமுடைந்து கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் மாணிக்கத்தின் நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...