கோவை: கோவையில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து தர பெண்ணின் பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து தர பெண்ணின் பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வடவள்ளி கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் மாணிக்கம் (21). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ படித்து வந்தார்.
கொரோனா காரணமாக கல்லூரிகள் இயங்காமல் விடுமுறை என்பதால் வடவள்ளி பகுதியில் உள்ள ஒரு மொபைல் கடையில் வேலை செய்து வந்துள்ளார். மாணிக்கம் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியை கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்து உள்ளார்.
இந்நிலையில், அந்த பெண் மாணிக்கத்திடம் தனக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்து வருவதாகவும், எனவே வீட்டுக்கு வந்து பெண் கேட்குமாறு கூறி உள்ளார். இதனையடுத்து, மாணிக்கம் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண்ணின் பெற்றோர்களிடம் அவர்களின் பெண்னை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார்.
இதனை அவர்கள் மறுத்து திருமணம் செய்து வைக்க விருப்பம் இல்லை எனக் கூறி உள்ளனர். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மன வேதனையுடன் இருந்து வந்த மாணிக்கம் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வடவள்ளி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலித்த பெண்ணை அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து தர மறுத்ததால் மனமுடைந்து கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் மாணிக்கத்தின் நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை வடவள்ளி கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் மாணிக்கம் (21). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ படித்து வந்தார்.
கொரோனா காரணமாக கல்லூரிகள் இயங்காமல் விடுமுறை என்பதால் வடவள்ளி பகுதியில் உள்ள ஒரு மொபைல் கடையில் வேலை செய்து வந்துள்ளார். மாணிக்கம் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியை கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்து உள்ளார்.
இந்நிலையில், அந்த பெண் மாணிக்கத்திடம் தனக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்து வருவதாகவும், எனவே வீட்டுக்கு வந்து பெண் கேட்குமாறு கூறி உள்ளார். இதனையடுத்து, மாணிக்கம் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண்ணின் பெற்றோர்களிடம் அவர்களின் பெண்னை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார்.
இதனை அவர்கள் மறுத்து திருமணம் செய்து வைக்க விருப்பம் இல்லை எனக் கூறி உள்ளனர். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மன வேதனையுடன் இருந்து வந்த மாணிக்கம் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வடவள்ளி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலித்த பெண்ணை அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து தர மறுத்ததால் மனமுடைந்து கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் மாணிக்கத்தின் நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.