கோவை: கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு இணைய வழியில் தேர்வு நடத்தியது போல, அரியர் மாணவர்களுக்கும் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடக்கோரி கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் தேர்வு எழுதும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு இணைய வழியில் தேர்வு நடத்தியது போல, அரியர் மாணவர்களுக்கும் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடக்கோரி கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் தேர்வு எழுதும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு அறிவித்தபடி உடனடியாக அரியர் மாணவர்களுக்கு தேர்வு முடிவை வழங்கிடுதல் அல்லது தற்பொழுது இறுதியாண்டு மாணவர்களுக்கு இணைய வழியில் தேர்வு நடத்தியதுபோல் அரியர் மாணவர்களுக்கும் தேர்வை நடத்தி உடனடியாக முடிவுகளை வெளியிடுதல், சென்னை பல்கலைக்கழகம் அறிவித்ததை போல் தேர்வு முடிவை மற்ற பல்கலைக்கழகங்களும் அறிவித்திடுதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

அப்போது, தரையில் அமர்ந்து தேர்வு எழுதும் நூதன போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அரியர் மாணவர்களின் நலன் கருதி உடனடியாக தேர்வு நடத்தி முடிவுகள் அறிவிக்க வேண்டும் எனவும் அதுவரை முதுகலை பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வுகளை ஒத்திவைக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
தமிழக அரசு அறிவித்தபடி உடனடியாக அரியர் மாணவர்களுக்கு தேர்வு முடிவை வழங்கிடுதல் அல்லது தற்பொழுது இறுதியாண்டு மாணவர்களுக்கு இணைய வழியில் தேர்வு நடத்தியதுபோல் அரியர் மாணவர்களுக்கும் தேர்வை நடத்தி உடனடியாக முடிவுகளை வெளியிடுதல், சென்னை பல்கலைக்கழகம் அறிவித்ததை போல் தேர்வு முடிவை மற்ற பல்கலைக்கழகங்களும் அறிவித்திடுதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
அப்போது, தரையில் அமர்ந்து தேர்வு எழுதும் நூதன போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அரியர் மாணவர்களின் நலன் கருதி உடனடியாக தேர்வு நடத்தி முடிவுகள் அறிவிக்க வேண்டும் எனவும் அதுவரை முதுகலை பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வுகளை ஒத்திவைக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.