நீட் தேர்வு முடிவில் ஓ.எம்.ஆர் சீட்டில் குளறுபடிகள் இருப்பதாக மாணவர்கள் புகார்..!

கோவை: நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஓ.எம்.ஆர் சீட்டில் வந்த மதிப்பெண்களுக்கும், நேற்று வெளியிடப்பட்டுள்ள மதிப்பெண்களுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகவும், ஓ.எம்.ஆர்.சீட்டில் குளறுபடிகள் நடந்து இருப்பதாகவும் தேர்வு எழுதிய மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஓ.எம்.ஆர் சீட்டில் வந்த மதிப்பெண்களுக்கும், நேற்று வெளியிடப்பட்டுள்ள மதிப்பெண்களுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகவும், ஓ.எம்.ஆர்.சீட்டில் குளறுபடிகள் நடந்து இருப்பதாகவும் தேர்வு எழுதிய மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வு முடிவுகள் நேற்று நாடு முழுவதும் வெளியிடப்பட்டன. இதில் பல்வேறு குளறுபடிகள் இருந்த நிலையில் NTA இணைய பக்கத்தில் இருந்து அந்த முடிவுகள் நீக்கப்பட்டு, திருத்தப்பட்ட முடிவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டன.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளில் ஓ.எம்.ஆர் சீட் முடிவுகளிலும் குளறுபடிகள் ஏற்பட்டு இருப்பதாக தேர்வு எழுதிய மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்த மாணவர் மனோஜ் என்பவர் பீளமேடு நேசனல் மாடல் பள்ளியில் மாணவர் மனோஜ் 12 ம் வகுப்பு முடித்தார். இவர் கடந்த செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வு எழுதிய நிலையில், அக்டோபர் 11ம் தேதி ஒ.எம்.ஆர் சீட்டில் வெளியான முடிவுகளை பார்த்துள்ளார். அதில் 594 மதிப்பெண்கள் என காட்டியது.

பின்னர் கடந்த 15ம் தேதி மீண்டும் ஒரு முறை மாணவர் மனோஜ் ஓ.எம்.ஆர் சீட்டை பார்த்த போதும் 594 மதிப்பெண் காட்டியது. இந்நிலையில், நேற்று வெளியான முடிவுகளில் 248 மதிப்பெண் மட்டும் காட்டியதால் மாணவர் மனோஜ் அதிர்ச்சி அடைந்து ஓ.எம்.ஆர் சீட்டை ஆய்வு செய்த பழைய ஓ.எம்.ஆர் சீட்டின் முடிவுகளுக்கும், நேற்று வந்த முடிவுகளுக்கும் வித்தியாசம் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர், இது குறித்து புகார் அளிக்க NTA டோல் ப்ரீ எண்ணில் தொடர்பு கொண்டால் முறையான பதில் இல்லை எனவும், இதுவரை 5 முறை மெயில் மூலம் புகார் தெரிவித்து இருப்பதாகவும் மாணவர் மனோஜ் தெரிவித்தார்.

மேலும், தற்போது உள்ள ஓ.எம்.ஆர் வேறு முடிவுகளை காட்டுவதாகவும், பழைய ஓ.எம்.ஆர்.வேறு முடிவுகளை காட்டுவதாகவும் நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி இருப்பதாகவும் மாணவர் மனோஜ் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...