கோவையில் மாடி தோட்டத்துக்கு மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.5.5 லட்சம் நிதி ஒதுக்கீடு

கோவை: கோவையில் மாடி தோட்டத்துக்கு மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.5.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் மாடி தோட்டத்துக்கு மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.5.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வீட்டுக்கொரு காய்கறி தோட்டம், அமைக்க வேண்டும் என்பதற்காக மாடித் தோட்டம் அமைக்கும் திட்டம் சில ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. இதன் கீழ், மாடித் தோட்டம் அமைக்கத் தேவையான பொருள்கள் மானியத்தில் வழங்கப்பட்டன.

இந்நிலையில், மாடித் தோட்டத்துக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க மானிய திட்டத்தை தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது. இதில், கோவை மாவட்டத்துக்கு ரூ.5.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதனை விருப்பமுள்ளவர்கள் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாடித் தோட்டத்துக்கு சென்சார் மற்றும் சென்சார் இல்லாமல் என இரண்டு முறைகளில் சொட்டுநீர் பாசனம் அமைக்கலாம். இதில், சென்சாருடன் தானாக இயங்கிகொள்ளும் வகையில் அமைக்க ரூ.4 ஆயிரம் வரை செலவாகும். இதில் 40 சதவீதமாக ரூ.1,600 மானியம் வழங்கப்படுகிறது", என்றார்.

மேலும், சென்சார் இல்லாமல் அமைக்க ரூ.1000 செலவாகும். இதில் 40 சதவீதமாக ரூ.400 மானியம் வழங்கப்படுகிறது. சென்சாருடன் கூடிய சொட்டுநீர் பாசனம் அமைக்க 50 எண்களும், சென்சார் இல்லாமல் அமைக்க 1,100 எண்களும் இலக்கு நிரணயிக்கப்பட்டுள்ளது. இதில் சென்சாருடன் அமைக்க ரூ.80 ஆயிரம், சென்சார் இல்லாமல் அமைக்க ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் சேர்த்து மொத்தமாக ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...