கோவை: கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பின்புறம் குப்பைத்தொட்டி அருகே பிறந்து ஐந்தே நாட்களான பெண் குழந்தை போலீசாரால் மீட்கப்பட்டது.
கோவை: கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பின்புறம் குப்பைத்தொட்டி அருகே பிறந்து ஐந்தே நாட்களான பெண் குழந்தை போலீசாரால் மீட்கப்பட்டது.
கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய போலீசார், கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வேன் மூலம் சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் நேற்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது, பேருந்து நிலையம் பின்புறம் உள்ள குப்பை தொட்டி அருகே குழந்தையின் அழுகுரல் கேட்டது.
இதனையடுத்து, போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, பிறந்து ஐந்து நாட்களான பெண் குழந்தை ஒன்று இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே, அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு அருகிலுள்ள பெண்களை அழைத்து அவர்கள் உதவிடன் அக்குழந்தையை மீட்டு முதலுதவி செய்து, பின்னர், 108 வாகனத்தின் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மீட்க்கபட்ட குழந்தையின் பெற்றோர் தொடர்பாக போலிசார் விசாரித்து வருகின்றனர். குழந்தையை சரியான நேரத்தில் கண்டெடுத்த போலீசாருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய போலீசார், கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வேன் மூலம் சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் நேற்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது, பேருந்து நிலையம் பின்புறம் உள்ள குப்பை தொட்டி அருகே குழந்தையின் அழுகுரல் கேட்டது.
இதனையடுத்து, போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, பிறந்து ஐந்து நாட்களான பெண் குழந்தை ஒன்று இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே, அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு அருகிலுள்ள பெண்களை அழைத்து அவர்கள் உதவிடன் அக்குழந்தையை மீட்டு முதலுதவி செய்து, பின்னர், 108 வாகனத்தின் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மீட்க்கபட்ட குழந்தையின் பெற்றோர் தொடர்பாக போலிசார் விசாரித்து வருகின்றனர். குழந்தையை சரியான நேரத்தில் கண்டெடுத்த போலீசாருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.