வால்பாறையில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி கணவன் முன் மனைவி பலி..!

வால்பாறையில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி கணவன் முன் மணைவி பலி ஆன சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

 வால்பாறை:

வால்பாறையில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி கணவன் முன் மனைவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை 

ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த தோனி முடி தேயிலைத் தோட்டத்தை சேர்ந்தவர் ராமானுஜம். இவர் இங்கு மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி விமலா (42) தேயிலை தோட்ட தொழிலாளராக பணியாற்றி வருகிறார் .

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், ராமானுஜம் மற்றும் அவர் மனைவியும் இருசக்கர வாகனத்தில் வால்பாறை மார்கெட் பகுதிக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்க வந்துள்ளனர். அப்போது, பொருட்களை வாங்கிகொண்டு, மதியம் அவர்கள் வசிக்கும் தோனி முடிக்கு திரும்ப சென்று கொண்டிருந்தார். அப்போது, நல்ல காத்து தேயிலை தோட்டத்தில் உள்ள சாலையில் திரும்பும்போது, எதிரே வந்த லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. 



விபத்தில், சாலையில் தூக்கி வீசப்பட்ட விமலா தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தார். விபத்தில், சிறு காயத்துடன் தப்பித்த, ராமானுஜம் கண்முன்னே அவர் மனைவி உயிர் பிரிந்தது.

தகவலறிந்து விரைந்து வந்த வால்பாறை காவல் உதவி ஆய்வாளர் சதீஷ், விமலாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

விபத்து குறித்து, வால்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை

மேற்கொண்டுள்ளனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் தலைமறைவாகி விட்டதால்,அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...