நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள தீயணைப்பு வீரர்கள், தன்னார்வலர்கள் என 300க்கும் மேற்பட்டவர்கள் தயாராக இருப்பதாக உதகை தீயணைப்பு நிலைய அதிகாரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள தீயணைப்பு வீரர்கள், தன்னார்வலர்கள் என 300க்கும் மேற்பட்டவர்கள் தயாராக இருப்பதாக உதகை தீயணைப்பு நிலைய அதிகாரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் குன்னூர், கோத்தகிரி பகுதியில் பொதுவாக அதிகரித்து காணப்படும். இதனை எதிர் கொள்ள தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர். மாவட்டம் முழுவதும் நூற்று ஒரு பேர் இருக்க வேண்டிய நிலையில், தற்போது பணியில் 57 பேர் மட்டுமே இருப்பதால் கூடுதல் தேவைகளுக்காக கோவை உள்ளிட்ட சமவெளிப் பகுதியில் இருந்து எப்போது தேவைப்பட்டாலும் தீயணைப்பு வீரர்கள் அழைத்துக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தீயணைப்பு நிலையங்களிலும் தலா 50 முதல் 70 வரை ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்திலும் பணியாற்ற தயார்படுத்தி இருப்பதாகவும் அவர்கள் அனைவருக்கும் வெள்ளக்காலத்திலும், பேரிடர் காலத்திலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக உதகை தீயணைப்பு நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் குன்னூர், கோத்தகிரி பகுதியில் பொதுவாக அதிகரித்து காணப்படும். இதனை எதிர் கொள்ள தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர். மாவட்டம் முழுவதும் நூற்று ஒரு பேர் இருக்க வேண்டிய நிலையில், தற்போது பணியில் 57 பேர் மட்டுமே இருப்பதால் கூடுதல் தேவைகளுக்காக கோவை உள்ளிட்ட சமவெளிப் பகுதியில் இருந்து எப்போது தேவைப்பட்டாலும் தீயணைப்பு வீரர்கள் அழைத்துக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தீயணைப்பு நிலையங்களிலும் தலா 50 முதல் 70 வரை ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்திலும் பணியாற்ற தயார்படுத்தி இருப்பதாகவும் அவர்கள் அனைவருக்கும் வெள்ளக்காலத்திலும், பேரிடர் காலத்திலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக உதகை தீயணைப்பு நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.