கோவை: கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்த 62 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்த 62 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் புகையிலைப்பொருட்கள் விற்பனைக்கு தடை உள்ளது. ஆனால், பலர் இதனை பதுக்கி வைத்து மறைமுகமாக விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை சரவணம்பட்டி, ஆர்.எஸ்.புரம் பெரியகடைவீதி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள சிறிய பெட்டிக்கடைகள், மளிகைக்கடைகளில் மாநகர போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான கணேஷ், ஹான்ஸ், விமல், பான் மசாலா ஆகியவற்றை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, போலீசார் 53 பேரை கைது செய்து அவர்கள் பதுக்கி வைத்த புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், கோவை உக்கடம், சாயிபாபா காலனி, காட்டூர் போன்ற பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சட்ட விரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த ரமேஷ்(44), லட்சுமணன்(56), ஆறுமுகம்(47), புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக்(29), வீரசேகரன்(43), இளையராஜா(27), மதுரையை சேர்ந்த செல்லையா(25), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார்(27), ஆனந்தமுருகன்(38), ஆகிய 9 பேரை கைது செய்து 60 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் புகையிலைப்பொருட்கள் விற்பனைக்கு தடை உள்ளது. ஆனால், பலர் இதனை பதுக்கி வைத்து மறைமுகமாக விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை சரவணம்பட்டி, ஆர்.எஸ்.புரம் பெரியகடைவீதி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள சிறிய பெட்டிக்கடைகள், மளிகைக்கடைகளில் மாநகர போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான கணேஷ், ஹான்ஸ், விமல், பான் மசாலா ஆகியவற்றை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, போலீசார் 53 பேரை கைது செய்து அவர்கள் பதுக்கி வைத்த புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், கோவை உக்கடம், சாயிபாபா காலனி, காட்டூர் போன்ற பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சட்ட விரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த ரமேஷ்(44), லட்சுமணன்(56), ஆறுமுகம்(47), புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக்(29), வீரசேகரன்(43), இளையராஜா(27), மதுரையை சேர்ந்த செல்லையா(25), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார்(27), ஆனந்தமுருகன்(38), ஆகிய 9 பேரை கைது செய்து 60 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.