திருப்பூரில் வரத்து குறைவு காரணமாக சின்ன வெங்காயம் விலை உயர்வு - நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

திருப்பூர்: திருப்பூரில் வரத்து குறைவு காரணமாக சின்ன வெங்காயம் விலை உயர்ந்து சேமிப்பு பட்டறைகளில் உள்ள வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூரில் வரத்து குறைவு காரணமாக சின்ன வெங்காயம் விலை உயர்ந்து சேமிப்பு பட்டறைகளில் உள்ள வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



விளைச்சல் குறைவு மற்றும் உற்பத்தி பரப்பும் குறைவாக இருப்பதால் சின்ன வெங்காயம் விலை சற்று உயர்ந்துள்ளது. தற்போது சேமிப்பு பட்டறைகளில் உள்ள சின்ன வெங்காயத்தினை வியாபாரிகள் ரூ. 60 முதல் ரூ. 65 வரை கொள்முதல் செய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் பொங்கலூர், கொடுவாய், குண்டடம், பல்லடம், மற்றும் பூளவாடி உள்ளிட்ட பல பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. அதிக விளைச்சல் இருந்தும், போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் சின்ன வெங்காயத்தை பட்டறையிட்டு சேமித்து வைத்திருந்தனர்.

இந்த நிலையில், தற்போது வரத்து குறைவு காரணமாக விலை ஏற்றமடைந்து வருவதால் தற்போது சேமிப்பில் இருந்த சின்ன வெங்காயம் கட்டுப்படியாகும் விலைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது, திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைக்கு திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது.

மேலும், கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலம் நெருங்கி வருவதால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...