தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்கும் வரை இந்து முன்னணியின் போராட்டம் ஓயாது - பொள்ளாச்சியில் காடேஸ்வார சுப்பிரமணியம்

கோவை: தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன அவற்றை மீட்கும் வரை இந்து முன்னணியின் போராட்டம் ஓயாது, என அவ்வமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வார சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன அவற்றை மீட்கும் வரை இந்து முன்னணியின் போராட்டம் ஓயாது, என அவ்வமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வார சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.



பொள்ளாச்சியில் அனைத்து இந்து இயக்கங்கள் சார்பில், இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனுக்கு, ‘ஷ்ரதாஞ்சலி’ நேற்று நடத்தப்பட்டது. விழாவின் போது பேசிய தென் தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மாரிமுத்து, இந்து தர்மத்தின் மீது அக்கறை கொண்டு செயலாற்றியவர் ராமகோபாலன் என்றும் இந்து சமுதாயம் மேலோங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் என்று புகழாரம் சூட்டினார்.



அவரின் எண்ணத்தை நிறைவேற்ற அனைவரும் பாடுபட வேண்டும், என்று வேண்டுகோள் விடுத்தார்.



நிகழ்ச்சியில் பங்கேற்ற மேகாலயாவின் முன்னாள் கவர்னர் சண்முகநாதன், பேசுகையில், ராமகோபாலன் இளைஞர்களை ஒருங்கிணைத்து கிராமங்கள் தோறும், வீதிகள் தோறும் விநாயகர் சிலைகள் வைத்து, இந்துகளிடையே எழுச்சியை ஏற்படுத்தியவர், என்றார்.

நிகழ்ச்சிக்கு பின், செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்கள் மீட்க இந்து முன்னணி சார்பில் வழக்கு போடப்பட்டுள்ளது. கோயில் நிலங்களை மீட்கும் வரை ஓய மாட்டோம். கோயில் நிலங்களை கோயிலுக்கு தான் பயன்படுத்த வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. அதை அரசு பின்பற்ற வேண்டும், என்றார்.

மேலும், கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதை செயல்படுத்த அரசு தயக்கம் காட்டுகிறது, என்று தெரிவித்தார்.

விழாவில் தென் தமிழக ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மாரிமுத்து, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில செயலாளர் அண்ணாத்துரை, மேகாலயா முன்னாள் ஆளுநர் வி.சண்முகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...