உதகை ஏடிசியில் கார் பார்க்கிங் பகுதியில் ஜீப்பில் இளைஞரின் சடலம் கண்டெடுப்பு - போலீசார் விசாரணை!

நீலகிரி: உதகை ஏடிசியில் கார் பார்க்கிங் பகுதியில் நீண்டகாலமாக நின்றிருந்த ஜீப்பில் தலையில் பலத்த காயத்துடன் இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து உதகை காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


நீலகிரி: உதகை ஏடிசியில் கார் பார்க்கிங் பகுதியில் நீண்டகாலமாக நின்றிருந்த ஜீப்பில் தலையில் பலத்த காயத்துடன் இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து உதகை காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



உதகை ஏடிசியில் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் நீண்ட காலமாக நின்றிருந்த வாகனத்திலிருந்து துர்நாற்றம் வந்ததைத் தொடர்ந்து அங்குள்ள மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அங்கு நின்றிருந்த ஜீப்பை திறந்து பார்த்தபோது அதில் இறந்த நிலையில் தலையில் பலத்த காயங்களுடன் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பது கண்டறியப்பட்டது.



இதையடுத்து, உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதற்கட்ட விசாரணையில் இவர் உதகை காந்தள் பகுதியைச் சேர்ந்த சிவா என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, கைப்பற்றிய சடலத்தில் தலையில் அடிபட்டுள்ள நிலையில், இவர் எப்படி இங்கு வந்தார், எப்படி இறந்தார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...