கோவையில் பெண் ஒருவர் குளிப்பதை செல்போனில் படம்பிடிக்க முயன்ற சிலிண்டர் விநியோகம் செய்யும் நபர் கைது!

கோவை: கோவையில் பெண் ஒருவர் குளிப்பதை செல்போனில் படம்பிடிக்க முயன்ற சிலிண்டர் விநியோகம் செய்யும் நபரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் பெண் ஒருவர் குளிப்பதை செல்போனில் படம்பிடிக்க முயன்ற சிலிண்டர் விநியோகம் செய்யும் நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பொன்னையராஜபுரம் பகுதியில் வசித்து வரும் 40 வயது பெண் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம்போல தனது வீட்டின் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தான் குளிப்பதை செல்போனில் படம் பிடிப்பதை அறிந்து கூச்சலிட்டு உள்ளார். இதனால் சுதாரித்துக் கொண்ட அந்த நபர் அங்கிருந்து வேகமாக நகர்ந்து உள்ளார்.

இந்நிலையில், அப்பெண் குளியலறை விட்டு வெளியே வந்து பார்த்த போது சிலிண்டர் விநியோகம் செய்யும் நபர் ஒருவர் அவசர அவசரமாக தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

பின்னர், இச்சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவர் வெரைட்டி ஹால் சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் சிலிண்டர் விநியோகிக்கும் செல்வராஜ் என்ற நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், விசாரணையில் செல்வராஜ் சிலிண்டர் விநியோகிக்க செல்லும்போது ஆள் நடமாட்டம் இல்லாததை அறிந்து கொண்டு தனது செல்போன் மூலம் பெண் குளிப்பதை படம் பிடிக்க முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து செல்வராஜை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...