ஈராக்கில் தற்கொலை படை தாக்குதலில் 25 பேர் பலி

கிர்குக்: ஈராக்கில் இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் பலியானார்கள். மேலும், 50 பேர் காயமடைந்தனர். ஈராக்கின் மொசூல் நகரை மீட்பதற்காக அரசு படைகளுக்கும், அதை தக்க வைப்பதற்காக ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான சண்டை  நடந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஈராக் அரசு படைகள் தீவிரவாதிகளுடன் போரிட்டு வருகிறது. இந்நிலையில் ஈராக்கில் உள்ள திக்ரித் மற்றும் சமரா நகரங்களில் நேற்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.

திக்ரித் நகரின் நுழைவு வாயில் அருகே வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 33 பேர் காயமடைந்தனர். இதேபோல் சமரா நகரில் கார் பார்க்கிங்கில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்களுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...