கோவை: கோவையில் திருமணமான பெண்ணிற்கு தொல்லை கொடுத்து வந்த நபரை கத்தியால் குத்திய தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை: கோவையில் திருமணமான பெண்ணிற்கு தொல்லை கொடுத்து வந்த நபரை கத்தியால் குத்திய தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை போத்தனூர் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்(48) கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகளை வீராச்சாமி(24) என்பவர் ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணை பின் தொடர்ந்து தனது காதலை அடிக்கடி வெளிப்படுத்தி வந்துள்ளார்.
அந்த பெண் காதலை மறுத்ததை தொடர்ந்து வீராசாமி, பெண்ணின் வீட்டிற்கு சென்று திருமணம் செய்து வைக்கும் படி கேட்டுள்ளார். ஆனால், பெண்ணின் பெற்றோர்கள் மறுத்துவிட நான்கு வருடங்களுக்கு முன்பு வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த வீராச்சாமி அந்த பெண் திருமணம் செய்த இடத்தை தெரிந்து கொண்டு அடிக்கடி அங்கே சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த பெண்ணின் தந்தை செல்வகுமார் நேற்று செட்டிப்பாளையம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த வீராசாமியை சந்தித்து, திருமணமான தனது பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று தகராறு செய்வது குறித்து தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த செல்வகுமார், அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு வீராச்சாமியை கழுத்து மற்றும் கை பகுதியில் குத்தியதில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து வீராச்சாமியை மீட்ட பொதுமக்கள், அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வீராச்சாமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த செட்டிப்பாளையம் போலீசார் செல்வகுமாரை கைது செய்து அவினாசி கிளை சிறையில் அடைத்தனர்.
கோவை போத்தனூர் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்(48) கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகளை வீராச்சாமி(24) என்பவர் ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணை பின் தொடர்ந்து தனது காதலை அடிக்கடி வெளிப்படுத்தி வந்துள்ளார்.
அந்த பெண் காதலை மறுத்ததை தொடர்ந்து வீராசாமி, பெண்ணின் வீட்டிற்கு சென்று திருமணம் செய்து வைக்கும் படி கேட்டுள்ளார். ஆனால், பெண்ணின் பெற்றோர்கள் மறுத்துவிட நான்கு வருடங்களுக்கு முன்பு வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த வீராச்சாமி அந்த பெண் திருமணம் செய்த இடத்தை தெரிந்து கொண்டு அடிக்கடி அங்கே சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த பெண்ணின் தந்தை செல்வகுமார் நேற்று செட்டிப்பாளையம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த வீராசாமியை சந்தித்து, திருமணமான தனது பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று தகராறு செய்வது குறித்து தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த செல்வகுமார், அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு வீராச்சாமியை கழுத்து மற்றும் கை பகுதியில் குத்தியதில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து வீராச்சாமியை மீட்ட பொதுமக்கள், அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வீராச்சாமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த செட்டிப்பாளையம் போலீசார் செல்வகுமாரை கைது செய்து அவினாசி கிளை சிறையில் அடைத்தனர்.