பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், கடந்த மார்ச் 2ம் தேதி முதல் 19ம் தேதி வரை பிளஸ்2 பொதுத் தேர்வு நடைபெற்றது. அதில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் இன்று சான்றிதழ் வழங்கப்பட்டது.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், கடந்த மார்ச் 2ம் தேதி முதல் 19ம் தேதி வரை பிளஸ்2 பொதுத் தேர்வு நடைபெற்றது. அதில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் இன்று சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதில், பொள்ளாச்சி மற்றும் வால்பாறை, தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, ஆதி திராவிட நலப்பள்ளி, சுயநிதிபள்ளி, நகராட்சி பள்ளி, மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 71 மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள், என மொத்தம் 4692 பேர் தேர்வு எழுதினர். 

அதற்கான தேர்வு முடிவு, கடந்த ஜூலை மாதம் 16ம் தேதியன்று வெளியானது. இதில் 4431 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்கள் கல்லூரியில் விணப்பிக்க ஏதுவாக, அப்போது மதிப்பெண் சான்றிதழ் நகல் மட்டும் வழங்கப்பட்டது. 

இந்நிலையில், பிளஸ்2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளி கல்வித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, நேற்று முதல், கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு பிளஸ்2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வழக்கும் பணி துவங்கப்பட்டது. 

அந்தந்த பள்ளிகளில் படித்த மாணவர்கள், நேரடியாக சென்று, தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வாங்கி வருகின்றனர். இன்னும், சில நாட்களில், அனைத்து மாணவர்களுக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழக்கும் பணி நிறைவு செய்யபடும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...