கோவை: பயன்பாட்டில் இருக்கும் மருத்துவ விடுப்பு, தற்செயல் விடுப்பு விடுமுறைகளை தடுக்கும் விதமாக அனுப்பட்ட கடித்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி, கோவையில் இன்று அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: பயன்பாட்டில் இருக்கும் மருத்துவ விடுப்பு, தற்செயல் விடுப்பு விடுமுறைகளை தடுக்கும் விதமாக அனுப்பட்ட கடித்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி, கோவையில் இன்று அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 2012ம் ஆண்டு முதல் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 2015ம் தேதியிலிருந்து அரசால் அனுமதிக்கப்பட்ட பயன்பாட்டில் இருந்து வந்த மருத்துவ விடுப்பு, சிறப்பு தற்செயல் விடுப்பு போன்ற விடுமுறைகள் எடுப்பதை தடுக்கும் வகையில் கடந்த 9 ஆம் தேதி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் இது போன்ற கடிதம் அனுப்பட்டதை கண்டித்தும், கடிதத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், நடைமுறையில் உள்ள விடுப்புகளை அனுமதிக்க வலியுறுத்தியும், கோவை அண்ணா பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கருப்பு கொடி அணிந்து அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் கோரிக்கையை பரிசீலனைக்கு அனுப்பி வைப்பதாக வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
கோவையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 2012ம் ஆண்டு முதல் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 2015ம் தேதியிலிருந்து அரசால் அனுமதிக்கப்பட்ட பயன்பாட்டில் இருந்து வந்த மருத்துவ விடுப்பு, சிறப்பு தற்செயல் விடுப்பு போன்ற விடுமுறைகள் எடுப்பதை தடுக்கும் வகையில் கடந்த 9 ஆம் தேதி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் இது போன்ற கடிதம் அனுப்பட்டதை கண்டித்தும், கடிதத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், நடைமுறையில் உள்ள விடுப்புகளை அனுமதிக்க வலியுறுத்தியும், கோவை அண்ணா பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கருப்பு கொடி அணிந்து அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் கோரிக்கையை பரிசீலனைக்கு அனுப்பி வைப்பதாக வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.