கேரளா அரசு போல் தமிழக அரசும் நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும் - பொள்ளாச்சி நெல் விவசாயிகள் கோரிக்கை

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் ஆழியார் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதியில் 3 ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பளவில் கடந்த ஜூன் மாதம் முதல் போக நெல் நடவு செய்யப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் ஆழியார் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதியில் 3 ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பளவில் கடந்த ஜூன் மாதம் முதல் போக நெல் நடவு செய்யப்பட்டது.

நடவு செய்யபட்டு 4 மாதங்களுக்குப் பிறகு, இந்த மாதம் நெல் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் அறுவடை செய்த சன்னரக நெல் குவிண்டால் ரூ.1950க்கும், மோட்டா ரகம் ரூ.1918 என விலை நிர்ணயித்து நேற்று முதல் ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் செய்யும் பணி தொடங்கியது.



இதனால், ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் கொண்டு வந்து, கொள்முதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் நெல்லுக்கான ஆதார விலையை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரளாவில் ஒரு குவிண்டால் நெலுக்கு ரூ.2600 வழங்கப்பட்டு வருகிறது. இதே போன்று, தமிழகத்திலும் ஆதார விலையை உயர்த்த வேண்டும் என்று பொள்ளாச்சி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், உரிய நேரத்தில், ஆனைமலையில் நெல் கொள்முதல் மையம் தொடங்கப்பட்டது, மகிழ்ச்சி அளிப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...