கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் ஆழியார் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதியில் 3 ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பளவில் கடந்த ஜூன் மாதம் முதல் போக நெல் நடவு செய்யப்பட்டது.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் ஆழியார் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதியில் 3 ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பளவில் கடந்த ஜூன் மாதம் முதல் போக நெல் நடவு செய்யப்பட்டது.
நடவு செய்யபட்டு 4 மாதங்களுக்குப் பிறகு, இந்த மாதம் நெல் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் அறுவடை செய்த சன்னரக நெல் குவிண்டால் ரூ.1950க்கும், மோட்டா ரகம் ரூ.1918 என விலை நிர்ணயித்து நேற்று முதல் ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் செய்யும் பணி தொடங்கியது.

இதனால், ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் கொண்டு வந்து, கொள்முதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் நெல்லுக்கான ஆதார விலையை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரளாவில் ஒரு குவிண்டால் நெலுக்கு ரூ.2600 வழங்கப்பட்டு வருகிறது. இதே போன்று, தமிழகத்திலும் ஆதார விலையை உயர்த்த வேண்டும் என்று பொள்ளாச்சி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், உரிய நேரத்தில், ஆனைமலையில் நெல் கொள்முதல் மையம் தொடங்கப்பட்டது, மகிழ்ச்சி அளிப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
நடவு செய்யபட்டு 4 மாதங்களுக்குப் பிறகு, இந்த மாதம் நெல் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் அறுவடை செய்த சன்னரக நெல் குவிண்டால் ரூ.1950க்கும், மோட்டா ரகம் ரூ.1918 என விலை நிர்ணயித்து நேற்று முதல் ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் செய்யும் பணி தொடங்கியது.
இதனால், ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில், அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் கொண்டு வந்து, கொள்முதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் நெல்லுக்கான ஆதார விலையை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரளாவில் ஒரு குவிண்டால் நெலுக்கு ரூ.2600 வழங்கப்பட்டு வருகிறது. இதே போன்று, தமிழகத்திலும் ஆதார விலையை உயர்த்த வேண்டும் என்று பொள்ளாச்சி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், உரிய நேரத்தில், ஆனைமலையில் நெல் கொள்முதல் மையம் தொடங்கப்பட்டது, மகிழ்ச்சி அளிப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.