நீலகிரி: குன்னூர் நகராட்சி சார்பில் சமூக இடைவெளியை பின்பற்றாமல், முகக்கவசம் அணியாமல், கொரோனா நோய் பரவ காரணமாக இருந்ததற்காக ஹோண்டா ஷாே ரூம் நிறுவனத்திற்கு ரூ.5000/- அபராதம் விதிக்கப்பட்டது.
நீலகிரி: குன்னூர் நகராட்சி சார்பில் சமூக இடைவெளியை பின்பற்றாமல், முகக்கவசம் அணியாமல், கொரோனா நோய் பரவ காரணமாக இருந்ததற்காக ஹோண்டா ஷாே ரூம் நிறுவனத்திற்கு ரூ.5000/- அபராதம் விதிக்கப்பட்டது.
கொரோனா நோய் பரவாமல் தடுக்க குன்னூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் பொது மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சில நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளி இல்லாமலும், முகக்கவசம் அணியாமலும் இருப்பதாக நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்த புகார்கள் வந்தன.

இதனைத் தொடர்ந்து, குன்னூர் மவுண்ட் ரோட்டில் உள்ள ஹோண்டா ஷாே ரூமில் ஆய்வு செய்த நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான அலுவலர்கள், அங்கு தனிமனித இடைவெளி இல்லாமலும், முக கவசம் அணியாமலும் வாடிக்கையாளர்கள் வருவதும், பணியாளர்கள் இருப்பதையும் கண்டு அந்த நிறுவனத்திற்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
கொரோனா நோய் பரவாமல் தடுக்க குன்னூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் பொது மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சில நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளி இல்லாமலும், முகக்கவசம் அணியாமலும் இருப்பதாக நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்த புகார்கள் வந்தன.
இதனைத் தொடர்ந்து, குன்னூர் மவுண்ட் ரோட்டில் உள்ள ஹோண்டா ஷாே ரூமில் ஆய்வு செய்த நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான அலுவலர்கள், அங்கு தனிமனித இடைவெளி இல்லாமலும், முக கவசம் அணியாமலும் வாடிக்கையாளர்கள் வருவதும், பணியாளர்கள் இருப்பதையும் கண்டு அந்த நிறுவனத்திற்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.