திருப்பூர்: தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள ஆன்லைன் குளறுபடிகளை சரி செய்யக்கோரி திருப்பூர் தொழிலாளர் துறை நல வாரிய அலுவலகம் முன்பு ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் வீடு திரும்பா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள ஆன்லைன் குளறுபடிகளை சரி செய்யக்கோரி திருப்பூர் தொழிலாளர் துறை நல வாரிய அலுவலகம் முன்பு ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் வீடு திரும்பா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் மார்ச் மாதம் முதல் தொழிலாளர் நல வாரியம் முடங்கி இருப்பதாகவும், ஊரடங்கு தளர்வு அறிவித்த பிறகும் நலவாரியத்தில் புதுப்பிப்பது மற்றும் புதியதாக விண்ணப்பிப்பதற்கு ஆன்லைன் முறையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும் அவற்றில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும், தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் முறையாக நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பாக திருப்பூர் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு வீடு திரும்பா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் மார்ச் மாதம் முதல் தொழிலாளர் நல வாரியம் முடங்கி இருப்பதாகவும், ஊரடங்கு தளர்வு அறிவித்த பிறகும் நலவாரியத்தில் புதுப்பிப்பது மற்றும் புதியதாக விண்ணப்பிப்பதற்கு ஆன்லைன் முறையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும் அவற்றில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும், தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் முறையாக நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பாக திருப்பூர் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு வீடு திரும்பா போராட்டத்தில் ஈடுபட்டனர்.