கோவை: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து வரும் 9ம் தேதி மாவட்ட ஜமாஅத் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் செஞ்சிலுவை சங்கம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கண்டித்து வரும் 9ம் தேதி மாவட்ட ஜமாஅத் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் செஞ்சிலுவை சங்கம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்றும், இது திட்டமிட்ட செயல் அல்ல என்றும் நீதிபதி எஸ்.கே.யாதவ் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி நீதிமன்றங்களே நீதியுடன் தீர்ப்பு வழங்குங்கள் என்கிற கோஷத்துடன் கருப்புக்கொடி ஏந்தி மாபெரும் கண்டன போராட்டம் வரும் 09ம் தேதி (வெள்ளிக்கிழமை) கோவை செஞ்சிலுவை சங்கம் முன் நடைபெறும் என மாவட்ட ஜமாஅத் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்றும், இது திட்டமிட்ட செயல் அல்ல என்றும் நீதிபதி எஸ்.கே.யாதவ் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி நீதிமன்றங்களே நீதியுடன் தீர்ப்பு வழங்குங்கள் என்கிற கோஷத்துடன் கருப்புக்கொடி ஏந்தி மாபெரும் கண்டன போராட்டம் வரும் 09ம் தேதி (வெள்ளிக்கிழமை) கோவை செஞ்சிலுவை சங்கம் முன் நடைபெறும் என மாவட்ட ஜமாஅத் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.