கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் வருவாய் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப. தலைமையில் இன்று நடைபெற்றது.
கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் வருவாய் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப. தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களுக்கும் உரிய சொத்துவரி வசூல் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, வசூல் பணிகள் துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சொத்துவரி விதிப்பு 20 நாட்கள் மற்றும் சொத்துவரி பெயர் மாற்றம் 10 நாட்கள் கோரும் விண்ணப்பங்களின் மீது உரிய காலக்கெடுவிற்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் துணை ஆணையாளர் எஸ்.மதுராந்தகி, உதவி ஆணையர் (வருவாய்) அண்ணாதுரை மற்றும் மண்டல உதவி வருவாய் அலுவலா்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களுக்கும் உரிய சொத்துவரி வசூல் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, வசூல் பணிகள் துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சொத்துவரி விதிப்பு 20 நாட்கள் மற்றும் சொத்துவரி பெயர் மாற்றம் 10 நாட்கள் கோரும் விண்ணப்பங்களின் மீது உரிய காலக்கெடுவிற்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் துணை ஆணையாளர் எஸ்.மதுராந்தகி, உதவி ஆணையர் (வருவாய்) அண்ணாதுரை மற்றும் மண்டல உதவி வருவாய் அலுவலா்கள் கலந்து கொண்டனர்.