கோவையில் தானியங்கி கைக்கிருமி நாசினி தெளிப்பானை உருவாக்கியுள்ள 9ம் வகுப்பு மாணவனுக்கு குவியும் பாராட்டுகள்!

கோவை: கோவையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தானியங்கி கைக்கிருமி நாசினி தெளிப்பானை உருவாக்கியுள்ள 9ம் வகுப்பு மாணவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


கோவை: கோவையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தானியங்கி கைக்கிருமி நாசினி தெளிப்பானை உருவாக்கியுள்ள 9ம் வகுப்பு மாணவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக நாளுக்கு நாள் நோய்தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனிடையே, கொரோனா தொற்று பரவலை தடுக்க கை சுத்தம் என்பது இன்றியமையாத தேவையாக உள்ளது. சோப்பைக்‌ கொண்டு கை கழுவுவது சால சிறந்ததாக இருந்தாலும்‌, நாம்‌ எல்லா இடங்களிலும்‌ அதை உபயோகப்படுத்த முடியாது. கிருமி நாசினி கொண்டு கையை சுத்தப்படுத்துவது மிகவும்‌ எளிதாகவும்‌, எல்லா இடங்களிலும்‌ நாம்‌ உபயோகப்படுத்துவதாகவும்‌ உள்ளது. கையால்‌ அல்லது காலால்‌ மிதித்து உபயோகப்படுத்தும்‌ கிருமி நாசினி தெளிப்பதனால்‌, எல்லாரும்‌ அதை தொடுவதால்‌ கிருமி பரவுவதற்கான வாய்ப்பாக உள்ளது.

இந்த நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் 9-ம்‌ வகுப்பு படிக்கும் வெ.மகிழன்‌ எனும் மாணவன்‌, சென்சார்‌ மூலம்‌ இயங்கும்‌ தானியங்கி கைக்கிருமி நாசினி தெளிப்பானை உருவாக்கியுள்ளார்.

இந்த மாணவன் தானியங்கி கைக்கிருமி நாசினி தெளிப்பானை ரூ.400 என்ற குறைந்த விலையில்‌ உருவாக்கி உள்ளார். இதை உருவாக்குவதற்கு 5 லிட்டர்‌ அளவுள்ள மறு சுழற்சி பிளாஸ்டிக்‌ கேன்களை உபயோகப்படுத்தி உள்ளது கூடுதல்‌ சிறப்பாகும்‌.

கடந்த இரண்டு மாதங்களாக உபயோகத்தில்‌ இருக்கும்‌ இந்த தானியங்கி கைக்கிருமி நாசினி தெளிப்பான்‌ இ.எஸ்‌.ஐ மருத்துவமனைக்கு மிகவும்‌ உபயோகமாக உள்ளது. இதை மருத்துவமனைகள்‌ மட்டுமின்றி மக்கள்‌ அதிகமாக பணிபுரியும்‌ தொழில்‌ நிறுவனங்களிலும்‌ இதை உபயோகிக்கலாம்.

இதனிடையே, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தானியங்கி கைக்கிருமி நாசினி தெளிப்பானை உருவாக்கியுள்ள மாணவன்‌ மகிழனை மருத்துவமனை முதல்வர்‌ நிர்மலா மற்றும்‌ மருத்துவக்‌ கண்காணிப்பாளர்‌ ரவிக்குமார்‌ அவர்களும்‌ ஊக்குவித்து பாராட்டினார்.

Newsletter

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதனால் தோளம்பா...

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளில் மின்தடை

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால...