கோவை போத்தனூர் அருகே மனைவி பிரிந்து சென்றதற்கு வீட்டின் உரிமையாளர் தான் காரணம் என கருதி கத்தியால் குத்திய நபர் கைது!

கோவை: கோவை போத்தனூர் அருகே மனைவி பிரிந்து சென்றதற்கு வீட்டின் உரிமையாளர் தான் காரணம் என கருதி கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை: கோவை போத்தனூர் அருகே மனைவி பிரிந்து சென்றதற்கு வீட்டின் உரிமையாளர் தான் காரணம் என கருதி கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை போத்தனூர் அம்மன் நகரைச் சேர்ந்தவர் மணிலால்(68). ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரியான இவரது வீட்டில் கணேசன்(53) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில், கணேசனின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். தனது மனைவி பிரிந்து செல்வதற்கு மணிலால் காந்தி தான் காரணம் என நினைத்து கணேசன் அவர் மீது கோபத்தில்

இருந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று மணிலால் காந்தி மீன் வாங்க வெளியே வந்தபோது, அங்கிருந்த கணேசன் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு மணிலால் காந்தியை குத்தியதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு அருகில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் இதுகுறித்து மணிலால் காந்தி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போத்தனூர் போலீசார், நீதிபதி முன் ஆஜர்படுத்தி கணேசனை சிறையில் அடைத்தனர்.

Newsletter

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

மருதூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதனால் தோளம்பா...

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளில் மின்தடை

தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால...