கோவை: கோவை வெரைட்டி ஹால் சாலை அருகே பேருந்தின் படியில் நின்று பயணம் செய்த வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை வெரைட்டி ஹால் சாலை அருகே பேருந்தின் படியில் நின்று பயணம் செய்த வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி வையம்பட்டி பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் ஆகாஷ் (20). இவர் கோவையில் உள்ள தனியார் அடுமனை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை தனியார் பேருந்தில் தொண்டாமுத்தூர் செல்ல காந்திபுரம் பகுதியில் ஏறியவர் படியில் நின்று பயணம் செய்த நிலையில், வெரைட்டி ஹால் சாலை அருகே பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. இவர் பேருந்தில் இருந்து தவறி விழுந்ததை கண்ட அங்கிருந்த பொதுமக்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது, அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து, மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த ஆகாஷின் உடல் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டு உள்ளது.
படியில் நின்று பயணம் செய்யாதீர்கள் என்ற எச்சரிக்கையை மீறி பயணம் செய்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருச்சி வையம்பட்டி பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் ஆகாஷ் (20). இவர் கோவையில் உள்ள தனியார் அடுமனை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை தனியார் பேருந்தில் தொண்டாமுத்தூர் செல்ல காந்திபுரம் பகுதியில் ஏறியவர் படியில் நின்று பயணம் செய்த நிலையில், வெரைட்டி ஹால் சாலை அருகே பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. இவர் பேருந்தில் இருந்து தவறி விழுந்ததை கண்ட அங்கிருந்த பொதுமக்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது, அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து, மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த ஆகாஷின் உடல் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டு உள்ளது.
படியில் நின்று பயணம் செய்யாதீர்கள் என்ற எச்சரிக்கையை மீறி பயணம் செய்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.