கோவை: கோவை வனசரகத்திற்கு உட்பட்ட தடாகம் தெற்கு பகுதியான மாங்கரை காப்புக்காட்டில், ஒற்றை யானை தாக்கி 64 வயதுடைய முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை வனசரகத்திற்கு உட்பட்ட தடாகம் தெற்கு பகுதியான மாங்கரை காப்புக்காட்டில், ஒற்றை யானை தாக்கி 64 வயதுடைய முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தடாகம் பகுதியில், அரசு விதிகளை மீறி அதிகளவு செங்கல் சூலைகள் செயல்பட்டு வருகின்றன. இவை, முழுக்க முழுக்க யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டபட்டவை. இதனால், அடிக்கடி யானைகள் ஊருக்குள் வருவது வழக்கமாகிவிட்டது.
இன்று, மாங்கரை சேர்ந்த செல்வம் என்பவர் தன் கால்நடைகளை வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் மேய்த்து கொண்டிருந்தார். சிறிது, நேரத்தில் கால்நடைகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதால், அதை தேடி காட்டிற்குள், சென்ற செல்வத்தை அங்கிருந்த ஒற்றை காட்டு யானை தாக்கி உள்ளது. அதில் பலத்த காயம் அடைந்த செல்வம், பரிதாபமாக அங்கேயே இறந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வனதுறையினர், உடலை கைப்பற்றி மாங்கரை சோதனை சாவடிக்கு அருகில் கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளிக்க 108 க்கு தகவல் தெரிவித்தனர். விரைந்த உதவிக்குழுவினர் பரிசோதனை செய்ததில், தாக்கப்பட்டவர் உயிரிழந்து விட்டாதாக கூறினார்.
மேற்ப்படி, பிரதே பரிசோதனைக்காக அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தடாகம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை தடாகம் பகுதியில், அரசு விதிகளை மீறி அதிகளவு செங்கல் சூலைகள் செயல்பட்டு வருகின்றன. இவை, முழுக்க முழுக்க யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டபட்டவை. இதனால், அடிக்கடி யானைகள் ஊருக்குள் வருவது வழக்கமாகிவிட்டது.
இன்று, மாங்கரை சேர்ந்த செல்வம் என்பவர் தன் கால்நடைகளை வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் மேய்த்து கொண்டிருந்தார். சிறிது, நேரத்தில் கால்நடைகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதால், அதை தேடி காட்டிற்குள், சென்ற செல்வத்தை அங்கிருந்த ஒற்றை காட்டு யானை தாக்கி உள்ளது. அதில் பலத்த காயம் அடைந்த செல்வம், பரிதாபமாக அங்கேயே இறந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வனதுறையினர், உடலை கைப்பற்றி மாங்கரை சோதனை சாவடிக்கு அருகில் கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளிக்க 108 க்கு தகவல் தெரிவித்தனர். விரைந்த உதவிக்குழுவினர் பரிசோதனை செய்ததில், தாக்கப்பட்டவர் உயிரிழந்து விட்டாதாக கூறினார்.
மேற்ப்படி, பிரதே பரிசோதனைக்காக அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தடாகம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.