பொள்ளாச்சியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது; குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மூதாட்டி தலைமறைவு..!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி கொள்ளுப்பாளையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது. அவர்களிடம் இருந்து, 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாகி உள்ள மூதாட்டியை குறித்து கோமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சி கொள்ளுப்பாளையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது. அவர்களிடம் இருந்து, 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாகி உள்ள மூதாட்டியை குறித்து கோமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி, கோமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கொள்ளுப்பாளையம், எஸ்.சந்திராபுரம் உள்ளிட்ட பகுதிகளில், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அதன்படி, அப்பகுதியில் ரோந்து மேற்கொண்ட பொழுது, சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த, பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நேரு நகரை சேர்ந்த மனோஜ்குமார்(29), பொள்ளாச்சி மரப்பேட்டையைச் சேர்ந்த மதுரை பாண்டி(40), ஆகிய இருவரிடம் சோதனையிட்டபோது, அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கோமங்கலம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், இவர்கள் இருவரும் பொள்ளாச்சி எஸ்.சந்திராபுரம் பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி மகாலட்சுமி என்பவரிடம் கஞ்சா விலைக்கு வாங்கி வந்து, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வருவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், சுமார் 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து மூதாட்டி மகாலட்சுமியை தேடி வருகின்றனர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...