திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 11.28 ஏக்கர் பரப்பளவில் ரூ.336 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசு சார்பில் ரூ.195 கோடியும், மாநில அரசு சார்பில் ரூ.141 கோடியே 96 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்போது இதற்கான பணிகள் வேகமெடுக்க தொடங்கியுள்ளன. இவற்றுக்கு மத்தியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மேலும், மருத்துவக் கல்லூரி கட்டிட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், அரசு மருத்துவமனை நிர்வாகம் கட்டிடங்களை பொதுப்பணித் துறையிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதையடுத்து, ஒப்படைக்கப்பட வேண்டிய கட்டிடங்களில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகள் புதிதாக வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புதிய வார்டுகளுக்கு நேற்று மாற்றப்பட்டனர். புதிய கட்டிடங்களை கட்ட, பழைய கட்டிடங்களை இடிக்கும் பணியும் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.
திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 11.28 ஏக்கர் பரப்பளவில் ரூ.336 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசு சார்பில் ரூ.195 கோடியும், மாநில அரசு சார்பில் ரூ.141 கோடியே 96 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்போது இதற்கான பணிகள் வேகமெடுக்க தொடங்கியுள்ளன. இவற்றுக்கு மத்தியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மேலும், மருத்துவக் கல்லூரி கட்டிட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், அரசு மருத்துவமனை நிர்வாகம் கட்டிடங்களை பொதுப்பணித் துறையிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதையடுத்து, ஒப்படைக்கப்பட வேண்டிய கட்டிடங்களில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகள் புதிதாக வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புதிய வார்டுகளுக்கு நேற்று மாற்றப்பட்டனர். புதிய கட்டிடங்களை கட்ட, பழைய கட்டிடங்களை இடிக்கும் பணியும் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.