கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் செயல்பட்டு வரும் சிறப்பு வரும் கொரோனா சிறப்பு மையத்தில், சித்த மருத்துவ சிகிச்சை மூலம் நுகரும் திறனை மீட்டெடுப்பதற்காக, ஓம பொடி பொட்டலம் வழங்கி அதை அடிக்கடி நுகர்ந்து வாசனை பிடிக்க சொல்லி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் செயல்பட்டு வரும் சிறப்பு வரும் கொரோனா சிறப்பு மையத்தில், சித்த மருத்துவ சிகிச்சை மூலம் நுகரும் திறனை மீட்டெடுப்பதற்காக, ஓம பொடி பொட்டலம் வழங்கி அதை அடிக்கடி நுகர்ந்து வாசனை பிடிக்க சொல்லி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அவ்வாறு, தொடர்ந்து ஐந்து நாட்கள் நுகர்ந்து ஓம பொடி பொட்டலத்தின் வாசனையை பிடித்தவர்களுக்கு, மூக்கின் நுகரும் திறன் மீட்டெடுக்கப்பட்டு உள்ளது என்று சொல்லபடுகிறது.
இது குறித்து மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி, தனம் கூறுகையில்:
கோவையில் அறிகுறி இன்றி கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு, கொடிசியா வளாகத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு நோயாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி முதல் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் அமுக்கரா சூரண மாத்திரை, நெல்லிக்காய் லேகியம், திரிபலாசூரணம், ஆடாதொடை மணப்பாகு உள்ளிட்ட சித்த மருந்துகள் வழங்கப்படுகின்றன.
மேலும், நுகரும் திறனை இழந்தவர்களுக்கு, அதனை மீட்கும் விதமாக ஓம பொடி பொட்டலம் வழங்கப்படுகிறது.
இந்த பொடியை 5 கிராம் அளவில் துணியில் பொட்டலமாக முடிந்து வைத்து, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த பொட்டலத்தை மூக்கில் வைத்து நுகர்ந்தால் விரைவில் நுகரும் திறன் மீட்கப்படும். கோவையில் சித்த மருத்துவ சிகிச்சை மூலம் 300-க்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்,என்றார்.
அவ்வாறு, தொடர்ந்து ஐந்து நாட்கள் நுகர்ந்து ஓம பொடி பொட்டலத்தின் வாசனையை பிடித்தவர்களுக்கு, மூக்கின் நுகரும் திறன் மீட்டெடுக்கப்பட்டு உள்ளது என்று சொல்லபடுகிறது.
இது குறித்து மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி, தனம் கூறுகையில்:
கோவையில் அறிகுறி இன்றி கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு, கொடிசியா வளாகத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு நோயாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி முதல் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் அமுக்கரா சூரண மாத்திரை, நெல்லிக்காய் லேகியம், திரிபலாசூரணம், ஆடாதொடை மணப்பாகு உள்ளிட்ட சித்த மருந்துகள் வழங்கப்படுகின்றன.
மேலும், நுகரும் திறனை இழந்தவர்களுக்கு, அதனை மீட்கும் விதமாக ஓம பொடி பொட்டலம் வழங்கப்படுகிறது.
இந்த பொடியை 5 கிராம் அளவில் துணியில் பொட்டலமாக முடிந்து வைத்து, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த பொட்டலத்தை மூக்கில் வைத்து நுகர்ந்தால் விரைவில் நுகரும் திறன் மீட்கப்படும். கோவையில் சித்த மருத்துவ சிகிச்சை மூலம் 300-க்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்,என்றார்.