கோவை: நீட் தேர்வை ரத்து செய்ய கோரி பிரதமருக்கு புறா மூலம் தூது விட்டு கோவை திமுக இளைஞரணி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: நீட் தேர்வை ரத்து செய்ய கோரி பிரதமருக்கு புறா மூலம் தூது விட்டு கோவை திமுக இளைஞரணி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மருத்துவ நுழைவு படிப்பான நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் ஆன்லைன் வகுப்புகளை சீர் செய்ய கோரி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவை உக்கடம் பகுதியில் திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய கோரியும், மாநில அரசை மாணவர்களின் ஆன்லைன் படிப்புகளை சீர் செய்ய கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.

அதன்பின் மருத்துவ மாணவர் போல் ஒரு பொம்மையை வைத்து மலர் வளையம் வைத்து மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் புறாவின் காலில் கடிதம் கட்டி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென பிரதமருக்கு தூது அனுப்பினர். இதே போன்று நீட் தேர்வை கண்டித்தும் ஆன்லைன் வகுப்புகளை சீர் செய்ய கோரியும் கோவையில் பல்வேறு இடங்களில் நீட் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ நுழைவு படிப்பான நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் ஆன்லைன் வகுப்புகளை சீர் செய்ய கோரி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவை உக்கடம் பகுதியில் திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய கோரியும், மாநில அரசை மாணவர்களின் ஆன்லைன் படிப்புகளை சீர் செய்ய கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.
அதன்பின் மருத்துவ மாணவர் போல் ஒரு பொம்மையை வைத்து மலர் வளையம் வைத்து மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் புறாவின் காலில் கடிதம் கட்டி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென பிரதமருக்கு தூது அனுப்பினர். இதே போன்று நீட் தேர்வை கண்டித்தும் ஆன்லைன் வகுப்புகளை சீர் செய்ய கோரியும் கோவையில் பல்வேறு இடங்களில் நீட் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.