பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோவை: பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை: பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்னை நகரம் என்றழைக்கப்படும் பொள்ளாச்சி, தென்னை சார்ந்த தொழில்களில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. மேலும் மாவட்டத்துக்கு இணையான மக்கள் தொகை அதிகமுள்ள பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அரசு இதுவரை மாவட்டமாக அறிவிக்கவில்லை.



இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை நிறைவேற்ற பொள்ளாச்சியை தனி மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், அக்கட்சியின் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் தலைமை தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அப்போது, பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. கோவை மாவட்டத்திலிருந்து திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது.

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட நான்கு வருவாய் வட்டங்கள் உள்ளது. அதேபோல், தென்னை சார்ந்த தொழிலில் படிப்படியாக முன்னேறி வரும் பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால், அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை.

எனவே, தமிழக அரசு உடனடியாக பொள்ளாச்சி தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...