கோவை: கோவையில் தன்னை கருணை கொலை செய்ய வேண்டி மனு அளிக்க வந்த 96 வயதான மூதாட்டிக்கு ரூ.100 கொடுத்து மாவட்ட ஆட்சியர் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கோவை: கோவையில் தன்னை கருணை கொலை செய்ய வேண்டி மனு அளிக்க வந்த 96 வயதான மூதாட்டிக்கு ரூ.100 கொடுத்து மாவட்ட ஆட்சியர் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கோவை அன்னூர் அடுத்த குப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த 96 வயதான மூதாட்டி முருகம்மாள். இவருடைய 12 ஏக்கர் விவசாய நிலத்தை போலியான பத்திரம் செய்து மகன் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இது குறித்து பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் முறையான சாட்சிகளை கொண்டு விசாரணை செய்து சொத்தை மீட்டுத் தர வேண்டும் எனவும் இல்லையெனில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் தன்னையும் தனது மகள் மூவரையும் கருணை கொலை செய்ய அனுமதி வழங்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.

இதனை கேட்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறியதுடன் தன்னை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என கூறிய முருகம்மாள் பாட்டிக்கு 100 ரூபாய் பணம் அளித்து, இதனை உணவு மற்றும் பேருந்து செலவிற்கு தற்போது வைத்து கொள்ளுங்கள் என கூறி அனுப்பி வைத்தார்.
மனு அளிக்க வந்த பாட்டிக்கு கோவை மாவட்ட ஆட்சியர் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கோவை அன்னூர் அடுத்த குப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த 96 வயதான மூதாட்டி முருகம்மாள். இவருடைய 12 ஏக்கர் விவசாய நிலத்தை போலியான பத்திரம் செய்து மகன் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இது குறித்து பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் முறையான சாட்சிகளை கொண்டு விசாரணை செய்து சொத்தை மீட்டுத் தர வேண்டும் எனவும் இல்லையெனில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் தன்னையும் தனது மகள் மூவரையும் கருணை கொலை செய்ய அனுமதி வழங்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.
இதனை கேட்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறியதுடன் தன்னை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என கூறிய முருகம்மாள் பாட்டிக்கு 100 ரூபாய் பணம் அளித்து, இதனை உணவு மற்றும் பேருந்து செலவிற்கு தற்போது வைத்து கொள்ளுங்கள் என கூறி அனுப்பி வைத்தார்.
மனு அளிக்க வந்த பாட்டிக்கு கோவை மாவட்ட ஆட்சியர் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.