கோவையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு இயங்கத் தொடங்கிய பேருந்து சேவை. கொரோனா அச்சம் காரணமாக பயணிகள் வரத்து குறைவு.

கோவையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு இயங்கத் தொடங்கிய பேருந்து சேவை. கொரோனா அச்சம் காரணமாக பயணிகள் வரத்து குறைவு.

கோவை: கோவையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு இயங்கத் தொடங்கிய பேருந்து சேவை. கொரோனா அச்சம் காரணமாக பயணிகள் வரத்து குறைவு.

செப்டம்பர் மாதத்திற்கான கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் மாநிலத்திற்குள் பேருந்து போக்குவரத்துக்கு, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, கோவை பேருந்து நிலையங்களில் இருந்து கரூர், திருச்சி, திருப்பூர், மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு அதிகாலை முதலே அரசின் பாதுகாப்பு மற்றும் வழிகாட்டு முறைகளை பின்பற்றி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.



50 சதவிகித பயணிகளுடன் வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயங்க, தமிழக அரசு அனுமதி அளித்திருந்தாலும், வைரஸ் தொற்று பரவல் அச்சம் காரணமாக காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகள் வரத்து குறைவாகவே காணப்படுகிறது.

இதனால், குறைந்த அளவிலான பயணிகளுடன் மட்டுமே வெளி மாவட்டங்களுக்கு கோவையில் இருந்து தற்போது பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கோவையில் இருந்து கரூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்டவெளி மாவட்டங்களுக்கு 353 பேருந்துகள் இயக்க, கோவை அரசு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ள நிலையில், பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகளை அதிகரிக்கவும் குறைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.



மேலும், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு, சத்தியமங்கலம், சேலம், திருப்பூர் கரூர், போன்ற வெளிமாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, மதுரை போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தென்மாவட்டங்களில், மதுரைக்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பயணிகள் முககவசம் அணிந்து தனிமனித இடைவெளியை பின்பற்றவும், பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள், பேருந்தில் பயணிகளின் தனிமனித இடைவெளியை உறுதி செய்து கொண்டு அரசின் நோய்தடுப்புவழிமுறைகளை பின்பற்றி பேருந்துகளை இயக்கவும், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



பேருந்துகள் இயக்கத்திற்கு முன்னதாக, கிருமிநாசினி கொண்டுஇருக்கைகள், கைப்பிடிகள் சுத்தம் செய்யப்படுகிறது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...