குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள காட்டெருமைகளை வனப்பகுதிக்கு விரட்ட பொதுமக்கள் கோரிக்கை!

நீலகிரி: குன்னூரில் மூன்று நாட்களாக குடியிருப்பு பகுதியில் முகாமிட்டிருக்கும் காட்டெருமைகளால் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி: குன்னூரில் மூன்று நாட்களாக குடியிருப்பு பகுதியில் முகாமிட்டிருக்கும் காட்டெருமைகளால் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் அண்மைகாலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டெருமை கூட்டங்கள் உணவு மற்றும் குடிநீருக்காக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு உலா வருகின்றன.

இந்த நிலையில், குன்னூர் கண்டோன்மென்ட் பகுதிக்கு உட்பட்ட செபஸ்டியர்புரம் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக காட்டெருமைகள் கிராமத்திற்குள் தஞ்சமடைந்துள்ளது.



இது பொதுமக்களை கண்டால் விரட்டி வந்து தாக்குவதற்கு முற்படுகிறது.

மேலும், கிராம மக்கள் ஒன்றிணைந்து இந்த காட்டெருமைகளை வனப்பகுதிக்கு விரட்டி அடித்தாலும் மீண்டும் கிராமத்திற்குள் வருவது தொடர் கதையாக உள்ளது.

எனவே, அசம்பாவிதங்கள் நடக்கும் முன் வனத்துறையினர் காட்டெருமைகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வேண்டுமென்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...