கோவை: கோவையில் விபத்துகளை தடுக்கும் நோக்கில் மாநகர் சாலைகளில் போலீசாரால் அனுமதிக்கப்பட்ட நேரங்களை தவிர மற்ற நேரங்களில் லாரிகள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போக்குவரத்து போலீஸ் துணை ஆணையர் முத்தரசு எச்சரித்துள்ளார்.
கோவை: கோவையில் விபத்துகளை தடுக்கும் நோக்கில் மாநகர் சாலைகளில் போலீசாரால் அனுமதிக்கப்பட்ட நேரங்களை தவிர மற்ற நேரங்களில் லாரிகள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் முத்தரசு எச்சரித்துள்ளார்.
கோவை மாநகர் பகுதிகளில் விபத்துகளை குறைக்க போக்குவரத்து போலீசாரால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சாலை வீதிகளை மீறி வாகனங்களை இயக்குபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, கோவை-திருச்சி சாலை, அவினாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சிறுவாணி சாலை என மாநகர் எல்லை பகுதிகளுக்குள் வரும் இச்சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை தடுக்கும் விதமாகவும், கட்டுப்படுத்தும் விதமாக காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை கனரக வாகனங்கள் பயணிக்க போலீசாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் முத்தரசு கூறுகையில், ‘‘அனுமதிக்கப்பட்ட நேரங்களை தவிர மற்ற நேரங்களில் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மாநகர் சாலைகளில் பயணித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி சார்பாக ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடப்பதால் அப்பணிகளுக்காக மட்டும் 15 லாரிகள் இந்நேரங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளன,’’ என்று தெரிவித்தார்.
கோவை மாநகர் பகுதிகளில் விபத்துகளை குறைக்க போக்குவரத்து போலீசாரால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சாலை வீதிகளை மீறி வாகனங்களை இயக்குபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, கோவை-திருச்சி சாலை, அவினாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சிறுவாணி சாலை என மாநகர் எல்லை பகுதிகளுக்குள் வரும் இச்சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை தடுக்கும் விதமாகவும், கட்டுப்படுத்தும் விதமாக காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை கனரக வாகனங்கள் பயணிக்க போலீசாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் முத்தரசு கூறுகையில், ‘‘அனுமதிக்கப்பட்ட நேரங்களை தவிர மற்ற நேரங்களில் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மாநகர் சாலைகளில் பயணித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி சார்பாக ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடப்பதால் அப்பணிகளுக்காக மட்டும் 15 லாரிகள் இந்நேரங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளன,’’ என்று தெரிவித்தார்.