கோவை: கோவை மாவட்டத்தில் 221 அரசு பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டதில், ரூ. 19 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது, என போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் 221 அரசு பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டதில், ரூ. 19 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது, என போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளித்தது. இருந்த போதும், கொரோனா தொற்று கோவையில் வேகமாக பரவி வருவதால், குறைந்த அளவிலான பயணிகள் கூட்டம் மட்டுமே பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். அதன் பொருட்டு, குறைந்த அளவிலான தனியார் மற்றும் அரசு பஸ்கள் தான் இயக்கப்பட்டு வருகிறது.
அரசு மற்றும் தனியார் பேருந்துகளில், கிருமிநாசினி அவ்வப்போது தெளிக்கப்பட வேண்டும் மற்றும் பயணிகளுக்கு கைகளை சுத்தம் செய்து கொள்ள கிருமி நாசினி மருந்து கொடுக்க வேண்டும் போன்ற அறிவுரைகளை அரசு வழங்கியுள்ளது.
இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், "காலை மற்றும் மாலை நேரத்தில் மட்டுமே பஸ்களில் ஓரளவுக்கு பயணிகள் பயணிக்கின்றனர். இதனால் அரசுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்ட போதிலும், பொதுமக்களின் நலன் கருதி பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறோம். நேற்று ரூ 19 லட்சம் மட்டுமே வசூலாகியுள்ளது," என்றார்.
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளித்தது. இருந்த போதும், கொரோனா தொற்று கோவையில் வேகமாக பரவி வருவதால், குறைந்த அளவிலான பயணிகள் கூட்டம் மட்டுமே பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். அதன் பொருட்டு, குறைந்த அளவிலான தனியார் மற்றும் அரசு பஸ்கள் தான் இயக்கப்பட்டு வருகிறது.
அரசு மற்றும் தனியார் பேருந்துகளில், கிருமிநாசினி அவ்வப்போது தெளிக்கப்பட வேண்டும் மற்றும் பயணிகளுக்கு கைகளை சுத்தம் செய்து கொள்ள கிருமி நாசினி மருந்து கொடுக்க வேண்டும் போன்ற அறிவுரைகளை அரசு வழங்கியுள்ளது.
இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், "காலை மற்றும் மாலை நேரத்தில் மட்டுமே பஸ்களில் ஓரளவுக்கு பயணிகள் பயணிக்கின்றனர். இதனால் அரசுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்ட போதிலும், பொதுமக்களின் நலன் கருதி பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறோம். நேற்று ரூ 19 லட்சம் மட்டுமே வசூலாகியுள்ளது," என்றார்.