நீலகிரி: கல்லூரி அரியர் தேர்விற்கு பணம் கட்டாதவர்களையும் தேர்ச்சி செய்ய வேண்டும் என்று இந்து இளைஞர் முன்னணி சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி: கல்லூரி அரியர் தேர்விற்கு பணம் கட்டாதவர்களையும் தேர்ச்சி செய்ய வேண்டும் என்று இந்து இளைஞர் முன்னணி சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து இந்து இளைஞர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரன் அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர் என்ற தமிழக அரசின் அறிவிப்பு பாராட்டுக்குரியது. அதே வேளையில் அரியர் தேர்விற்கு கட்டணம் செலுத்த முடியாமல் விண்ணப்பிக்காது விட்டுவிட்ட மாணவர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், கல்லூரியில் புதிதாக முதலாமாண்டு சேரும் மாணவர்களுக்கான நுழைவுக் கட்டணத்தை எளிய தவணை முறைகளில் செலுத்த வழிவகை செய்ய வேண்டும். கொரோனா பாதிப்பால் வருமானம் இழந்து கட்டணம் செலுத்த இயலாத மூன்றாமாண்டு அல்லது இறுதி பருவத் தேர்வு எழுதுகின்ற தொழில்நுட்பம் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பருவத்தேர்வு கட்டணங்களை அரசே ஏற்று அவர்களுக்கு சலுகை காட்ட முன்வர வேண்டும் என்று இந்து இளைஞர் முன்னணி சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்து இளைஞர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரன் அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர் என்ற தமிழக அரசின் அறிவிப்பு பாராட்டுக்குரியது. அதே வேளையில் அரியர் தேர்விற்கு கட்டணம் செலுத்த முடியாமல் விண்ணப்பிக்காது விட்டுவிட்ட மாணவர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், கல்லூரியில் புதிதாக முதலாமாண்டு சேரும் மாணவர்களுக்கான நுழைவுக் கட்டணத்தை எளிய தவணை முறைகளில் செலுத்த வழிவகை செய்ய வேண்டும். கொரோனா பாதிப்பால் வருமானம் இழந்து கட்டணம் செலுத்த இயலாத மூன்றாமாண்டு அல்லது இறுதி பருவத் தேர்வு எழுதுகின்ற தொழில்நுட்பம் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பருவத்தேர்வு கட்டணங்களை அரசே ஏற்று அவர்களுக்கு சலுகை காட்ட முன்வர வேண்டும் என்று இந்து இளைஞர் முன்னணி சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.