திருப்பூர்: பல்லடம் அருகே கிராமத்தின் மற்றொரு பகுதியில் மாற்று பாதை வழியாக மீண்டும் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: பல்லடம் அருகே கிராமத்தின் மற்றொரு பகுதியில் மாற்று பாதை வழியாக மீண்டும் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும், தமிழக அரசின் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகமும் இணைந்து தமிழகத்தின் மேற்கு மற்றும் வட மாவட்டங்களான கோவை, திருப்பூர் ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 12 உயர்மின் கோபுரங்கள் திட்டங்களை விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக செயல்படுத்த பணிகள் நடைபெற்று வருகின்றது.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் விவசாய விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் கொண்டு செல்வதற்கு பதிலாக சாலையோரமாக கேபிள் மூலம் கொண்டு செல்லுமாறு வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வாவிபாளையம் கிராமத்தில் விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி உயர்மின் கோபுரம் அமைப்பதற்கான அளவீட்டுப் பணிகள் முடிவடைந்து, தற்போது உயர் மின் கோபுரம் நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், மீண்டும் அதே கிராமத்தில் மாற்று வழியாக மீண்டும் ஒரு உயர் மின் கோபுரம் அமைப்பதற்கான ஆயத்த பணிகளை இன்று பல்லடம் வட்டாட்சியர் சிவசுப்பிரமணியம் தலைமையில், பவர்கிரி நிறுவன அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதனையறிந்த அப்பகுதி விவசாயிகள் வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி இப்பகுதியில் அளவீட்டுப் பணிகள் முடிவடைந்து, உயர்மின் கோபுர பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் விவசாய விளை நிலத்தில் எதற்காக அளவிட்டு பணிக்கான ஆயத்தப் பணிகள் நடைபெறுகிறது என அப்பகுதி விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அரசு அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.
மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும், தமிழக அரசின் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகமும் இணைந்து தமிழகத்தின் மேற்கு மற்றும் வட மாவட்டங்களான கோவை, திருப்பூர் ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 12 உயர்மின் கோபுரங்கள் திட்டங்களை விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக செயல்படுத்த பணிகள் நடைபெற்று வருகின்றது.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் விவசாய விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் கொண்டு செல்வதற்கு பதிலாக சாலையோரமாக கேபிள் மூலம் கொண்டு செல்லுமாறு வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வாவிபாளையம் கிராமத்தில் விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி உயர்மின் கோபுரம் அமைப்பதற்கான அளவீட்டுப் பணிகள் முடிவடைந்து, தற்போது உயர் மின் கோபுரம் நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், மீண்டும் அதே கிராமத்தில் மாற்று வழியாக மீண்டும் ஒரு உயர் மின் கோபுரம் அமைப்பதற்கான ஆயத்த பணிகளை இன்று பல்லடம் வட்டாட்சியர் சிவசுப்பிரமணியம் தலைமையில், பவர்கிரி நிறுவன அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதனையறிந்த அப்பகுதி விவசாயிகள் வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி இப்பகுதியில் அளவீட்டுப் பணிகள் முடிவடைந்து, உயர்மின் கோபுர பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் விவசாய விளை நிலத்தில் எதற்காக அளவிட்டு பணிக்கான ஆயத்தப் பணிகள் நடைபெறுகிறது என அப்பகுதி விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அரசு அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.